சென்னை: நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் ப. சுப்பராயனுக்கு நினைவிடம் கட்டுவதாக சொன்னீங்களே என்னாச்சு என்று கேட்ட தவெக தலைவர் விஜய்க்கு, திமுகவின் ராஜீவ் காந்தி, யோவ் என்று விளித்துப் பதில் கொடுத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
நாமக்கல்லில் இன்று நடந்த கூட்டத்தில் விஜய் பேசும்போது நாமக்கல்லைச் சேர்ந்த, முன்னாள் முதல்வரான ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக திமுக வாக்குறுத்தி கொடுத்தது. அது என்னாச்சு என்று கேட்டிருந்தார். அதற்கு தற்போது திமுக தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் ஆர். ராஜீவ் காந்தி அளித்துள்ள எக்ஸ் தளப் பதிவில், யோவ் விஜய், பொய் பேசுவதை நிறுத்தியா…பொய்.. பொய்யா பேச வேண்டியது!!!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கலில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என ‘கீச்சி’ ட்டுள்ளார்…
கடந்த 2024 மே மாதம் நாமக்கல் மாவட்டம், தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ப.சுப்பராயன் அவர்களுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த ஓராண்டாக இதன் கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது என்று அவர் பதிலளித்துள்ளார்.
விஜய்யை பொது வெளியில் வைத்து, ஒரு பொறுப்பான திமுக நிர்வாகி, யோவ் என்று பதிலளித்து டிவீட் போட்டுள்ளது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}