சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 10, 2026) தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பொங்கல் விழாக்களில் கலந்துகொண்டார். அப்போது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வெற்றி குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானையில் பொங்கலிட்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்கிருந்த பசுக்களுக்கு உணவு வழங்கிய முதல்வர், பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தல் குறித்துத் தனது நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசுகையில்:"வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்குக் குறையாமல் வெற்றி பெறுவோம் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்; ஆனால், இப்போது நாம் ஆற்றியுள்ள மக்கள் பணிகளை எல்லாம் பார்க்கும் போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற அபார நம்பிக்கை எனக்கு வந்துள்ளது" என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் திமுகவைப் போல வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக வேலை செய்ய முடியாது என பாஜகவினரே மற்றும் பிற எதிர்தரப்பினரே சொல்கிறார்கள்" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். 'வெல்வோம் ஒன்றாக' என்ற முழக்கத்தோடு, தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் யாரையும் பின் தங்க விடமாட்டோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த விழாக்களில் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி முதல்வரின் இந்த "200+" தொகுதி வெற்றி முழக்கம் திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
{{comments.comment}}