சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, உடல் நலம் சரியான நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜியை விக்னேஷ்வரன் என்ற இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விக்னேஷ்வரனை கைது செய்த போலீசார் விசாரித்ததில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் தான் மருத்துவரை தாக்கியதாக இளைஞர் கூறினார்.

மருத்துவரை தாக்கிய விக்னேஷ் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்டடனர்.
இதனையடுத்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசும் சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்பின்னர் மருத்துவர்களும் போராட்டங்களை நிறுத்தினர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி உடல் நலம் தேறிய நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் முழு நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}