கொச்சி: கொச்சி கலமசேரியில் நடந்த ஜெஹோவா சாட்சிகள் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என்று கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார். அவர் மீது போலீஸார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொச்சி கலமசேரியில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடந்த ஜெஹோவா சாட்சிகள் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் முதலில் ஒரு பெண் பலியானார். அதைத் தொடர்ந்து காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குமாரி என்ற இன்னொரு பெண்ணும் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கி விட்ட இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்கள் அலர்ட் செய்யப்பட்டன. கேரளாவுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. வாகன சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்ற நபர் சரணடைந்தார். தான்தான் இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று அவர் போலீஸாரிடம் கூறவே போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதே ஜெஹோவா சாட்சிகள் சர்ச்சைச் சேர்ந்தவர்தான் மார்ட்டின். தனது செல்போனிலிருந்து ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக தெரிவித்தார் மார்ட்டின்.
விசாரணைக்குப் பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, தான் ஏன் குண்டு வைத்தேன் என்ற காரணத்தை விளக்கி தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவும் போட்டுள்ளார் மார்ட்டின். அதில் ஜெஹோவா சாட்சிகள் சர்ச்சானது, துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் தொடர்ந்து அவர்களை கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்து விட்டனர். அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. எனவேதான் வெடிகுண்டு வைத்தேன் என்று கூறியுள்ளார் மார்ட்டின்.
மார்ட்டின் வாக்குமூலமும், அவர் செய்த காரியமும் கேரளாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}