நான்தான் குண்டு வைத்தேன்.. கேரளாவை அதிர வைத்த டொமினிக் மார்ட்டின்.. லைவ் வீடியோ போட்டு பரபரப்பு!

Oct 29, 2023,09:58 PM IST

கொச்சி: கொச்சி கலமசேரியில் நடந்த ஜெஹோவா சாட்சிகள் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிகுண்டு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என்று கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார். அவர் மீது போலீஸார் யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கொச்சி கலமசேரியில் உள்ள மாநாட்டுக் கூடத்தில் நடந்த ஜெஹோவா சாட்சிகள் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் முதலில் ஒரு பெண் பலியானார். அதைத் தொடர்ந்து காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குமாரி என்ற இன்னொரு பெண்ணும் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நாட்டையே உலுக்கி விட்ட இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்கள் அலர்ட் செய்யப்பட்டன. கேரளாவுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. வாகன சோதனை நடத்தப்பட்டது.




இந்த நிலையில் கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்ற நபர் சரணடைந்தார். தான்தான் இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று அவர் போலீஸாரிடம் கூறவே போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அதே ஜெஹோவா சாட்சிகள் சர்ச்சைச் சேர்ந்தவர்தான் மார்ட்டின். தனது செல்போனிலிருந்து ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக தெரிவித்தார் மார்ட்டின்.


விசாரணைக்குப் பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, தான் ஏன் குண்டு வைத்தேன் என்ற காரணத்தை விளக்கி தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவும் போட்டுள்ளார் மார்ட்டின். அதில் ஜெஹோவா சாட்சிகள் சர்ச்சானது, துவேஷத்தைப் பரப்பி வருகிறது. அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று நான் தொடர்ந்து அவர்களை கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் அதைப் புறக்கணித்து விட்டனர். அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. எனவேதான் வெடிகுண்டு வைத்தேன் என்று கூறியுள்ளார்  மார்ட்டின்.


மார்ட்டின் வாக்குமூலமும், அவர் செய்த காரியமும் கேரளாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மார்ட்டினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்