சென்னை: கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள மூளையை உண்ணும் அமீபா குறித்து பயப்பத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், மூளையை உண்ணும் அமீபாவால், ஏரி மற்றும் குளங்களில் குளித்த 3 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுள், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபாவால் உயிரிழந்து உள்ளனர். இந்த மூவரும் ஆறு, குளங்களில் குளிக்கும் போது அவர்களது மூக்கின் வழியாக சென்ற அமீபாவால் தான் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை திசுக்களை அழித்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இறந்து போவதாக அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த அமீபா பாதிப்பால் கேரளாவில் 4வதாக ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான்.
இந்த அமீபா குறித்து தமிழ்நாட்டிலும் பலர் கவலை அடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், மூளை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் கவனக்குறைவாகவும் இருக்கக் கூடாது. இந்த பர்டிக்குலர் டிசிஸ் வருதுனு சொல்றோம். அதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும்.
குடிநீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் சேகரிக்கும் சம்ப்பில், மழை தண்ணீர் புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நாமளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். கைகளை ரெலகுலராக கழுவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}