டெல்லி: மக்களுக்குப் பிடிக்காவிட்டால், மக்களிடையே ஒருமித்த ஆதரவு கிடைக்காவிட்டால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதை மக்களிடம் திணிக்கக் கூடாது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி கூறியுள்ளார்.
இதுகுறித்து குரேஷி கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக விரிவான விவாதம் தேவை. அது யாருக்கும் பிடிக்காவிட்டால் அதை கைவிட வேண்டும். மக்களிடம் திணிக்கக் கூடாது.
5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பா, தற்போதைய தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக சற்று முதுகெலும்பு உள்ளதாக செயல்பட வேண்டும். விதி மீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். துணிச்சலுடன் செயல்பட வேண்டும். அனைவருக்கும் பொதுவான நடவடிக்கைகளை எடுக்க அது முன்வர வேண்டும்.
இலவசத் திட்டங்களை அறிவிப்பது சட்டப்படி குற்றம் இல்லை. எந்தக் கட்சி வேண்டுமானாலும் அதைச் செய்ய முடியும். உச்சநீதிமன்றமே இலவசங்களை ஒழிப்பது இயலாது என்று தெரிவித்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான திட்டத்தை பாஜக முன்வைத்துள்ளது. மத்திய அரசு இதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கிறார்கள். குறிப்பாக மாநிலக் கட்சிகள் இதை எதிர்த்து வருகின்றன. இந்தத் திட்டம் தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}