தருமபுரி : தந்தை பெரியாரை தவறாகப் பேசினால் பாமக வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என பாஜகவை கண்டித்து பேசியுள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் செய்து வருகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் மதுரையில் அவர் பேசுகையில், கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன்பு இருந்து அகற்றப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை இது தான் என்று பேசினார்.
இது சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் இதைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:
தமிழக முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து விட்டார்கள். பீகாரில் அறிவித்து கணக்கெடுப்பு முடித்து, அதனுடைய முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள். நேற்று முன்தினம் அது சம்பந்தமாக பீகார் மாநிலத்தில் 65 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் உயர்த்துவோம் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. மொத்தம் 75 விழுக்காடு இட ஒதுக்கீடு பீகார் மாநிலத்தில் வரப்போகிறது.
தமிழகத்தில் சமூக நீதி , சமூக நீதி என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக இருக்கின்ற மதுக்கடைகள் 5000. ஆனால் சந்து கடையாக 25,000 கடை இருக்கிறது. ஒரு பக்கம் மது, ஒரு பக்கம் போதை பொருள் என ஒரு தலைமுறையே போய்விட்டது. அரசு இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தந்தை பெரியாரின் மண் இது. அந்த மண்ணில் அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது தவறு. தந்தை பெரியார் இல்லை என்றால், தமிழகத்தில் சமூகநீதி கிடையாது. தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. ஏனென்றால், எங்கள் பட்டாளி கட்சியின் முன்னோடிகள். எங்கள் கட்சியில் மூன்று பேரை முன்னோடியாக வைத்துள்ளோம். அண்ணா, அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். மூன்று பேரை பற்றி யாராவது தப்பாக பேசினால், நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம் என்றார் அவர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}