அதெப்படி பெரியாரைத் தப்பாகப் பேசலாம்.. வேடிக்கை பார்க்க முடியாது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Nov 10, 2023,03:28 PM IST

தருமபுரி : தந்தை பெரியாரை தவறாகப் பேசினால் பாமக வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என பாஜகவை கண்டித்து பேசியுள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.


பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் செய்து வருகிறார்.  ஸ்ரீரங்கம் மற்றும் மதுரையில் அவர் பேசுகையில், கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்பவர்களின் சிலை கோவில்களின் முன்பு இருந்து அகற்றப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கை  இது தான் என்று பேசினார்.


இது சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் இதைக்  கண்டித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.  தருமபுரியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:




தமிழக முதல்வர் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவித்து விட்டார்கள். பீகாரில் அறிவித்து கணக்கெடுப்பு முடித்து, அதனுடைய முடிவுகளை வெளியிட்டு விட்டார்கள். நேற்று முன்தினம் அது சம்பந்தமாக பீகார் மாநிலத்தில் 65 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நாங்கள் உயர்த்துவோம் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. மொத்தம் 75 விழுக்காடு இட ஒதுக்கீடு பீகார் மாநிலத்தில் வரப்போகிறது. 


தமிழகத்தில் சமூக நீதி ,  சமூக நீதி என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக இருக்கின்ற மதுக்கடைகள் 5000. ஆனால் சந்து கடையாக 25,000 கடை இருக்கிறது.  ஒரு பக்கம் மது, ஒரு பக்கம் போதை பொருள் என ஒரு தலைமுறையே போய்விட்டது. அரசு இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.


தந்தை பெரியாரின் மண் இது. அந்த மண்ணில் அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது தவறு. தந்தை பெரியார் இல்லை என்றால், தமிழகத்தில் சமூகநீதி கிடையாது. தந்தை பெரியார் பற்றி அண்ணாமலையோ அவர் சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசக்கூடாது. ஏனென்றால், எங்கள் பட்டாளி கட்சியின் முன்னோடிகள். எங்கள் கட்சியில் மூன்று பேரை முன்னோடியாக வைத்துள்ளோம். அண்ணா, அம்பேத்கர், புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் ஆவார்கள். மூன்று பேரை பற்றி யாராவது தப்பாக பேசினால், நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்