எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான்.. நேற்று புதுச்சேரியிலும் நடந்தது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Dec 29, 2024,05:14 PM IST

விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.


புதுச்சேரியில் நேற்று பாமக சிறப்புப் பொதுக்குழுவில் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் மற்றும் விவாதத்திற்குப் பின்னர் இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து டாக்டர் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, மூத்த தலைவர்கள் வழக்கறிஞர் கே.பாலு, அருள், திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் இருந்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது:




மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுப் பணிகள், கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸுடன் பேசினோம். என்னென்ன போராாட்டங்கள் குறித்துப் பேசினோம். வரப் போகும் ஆண்டு எங்களுக்கு முக்கியானது. மக்கள் விரோத ஆட்சியை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்.  அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம் என்றார் டாக்டர் அன்புமணி.


தொடர்ந்து செய்தியாளர்கள், நேற்று நடந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, பாமக ஒரு ஜனநாயக அமைப்பு. நேற்று நடந்தது பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான் நேற்றும் நடந்தது என்றார் அன்புமணி.


இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.


டாக்டர் ராமதாஸுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் பெரிதாக விளக்கம் தரவில்லை டாக்டர் அன்புமணி. அவரது பேட்டியைப் பார்க்கும்போது டாக்டர் ராமதாஸுடன் இப்போதைக்கு சமரசம் ஏற்பட்டுள்ளதாக உணர முடிகிறது. அதேசமயம், பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்