விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
புதுச்சேரியில் நேற்று பாமக சிறப்புப் பொதுக்குழுவில் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் மற்றும் விவாதத்திற்குப் பின்னர் இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து டாக்டர் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, மூத்த தலைவர்கள் வழக்கறிஞர் கே.பாலு, அருள், திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் இருந்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது:

மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுப் பணிகள், கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸுடன் பேசினோம். என்னென்ன போராாட்டங்கள் குறித்துப் பேசினோம். வரப் போகும் ஆண்டு எங்களுக்கு முக்கியானது. மக்கள் விரோத ஆட்சியை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம் என்றார் டாக்டர் அன்புமணி.
தொடர்ந்து செய்தியாளர்கள், நேற்று நடந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, பாமக ஒரு ஜனநாயக அமைப்பு. நேற்று நடந்தது பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான் நேற்றும் நடந்தது என்றார் அன்புமணி.
இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.
டாக்டர் ராமதாஸுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் பெரிதாக விளக்கம் தரவில்லை டாக்டர் அன்புமணி. அவரது பேட்டியைப் பார்க்கும்போது டாக்டர் ராமதாஸுடன் இப்போதைக்கு சமரசம் ஏற்பட்டுள்ளதாக உணர முடிகிறது. அதேசமயம், பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}