எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான்.. நேற்று புதுச்சேரியிலும் நடந்தது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Dec 29, 2024,05:14 PM IST

விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.


புதுச்சேரியில் நேற்று பாமக சிறப்புப் பொதுக்குழுவில் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் மற்றும் விவாதத்திற்குப் பின்னர் இன்று சென்னையிலிருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து டாக்டர் ராமதாஸைச் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின்போது பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, மூத்த தலைவர்கள் வழக்கறிஞர் கே.பாலு, அருள், திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் இருந்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் அன்புமணி ராமதாஸ். அப்போது அவர் கூறியதாவது:




மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுப் பணிகள், கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸுடன் பேசினோம். என்னென்ன போராாட்டங்கள் குறித்துப் பேசினோம். வரப் போகும் ஆண்டு எங்களுக்கு முக்கியானது. மக்கள் விரோத ஆட்சியை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும்.  அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தோம் என்றார் டாக்டர் அன்புமணி.


தொடர்ந்து செய்தியாளர்கள், நேற்று நடந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, பாமக ஒரு ஜனநாயக அமைப்பு. நேற்று நடந்தது பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான் நேற்றும் நடந்தது என்றார் அன்புமணி.


இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.


டாக்டர் ராமதாஸுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்தும் பெரிதாக விளக்கம் தரவில்லை டாக்டர் அன்புமணி. அவரது பேட்டியைப் பார்க்கும்போது டாக்டர் ராமதாஸுடன் இப்போதைக்கு சமரசம் ஏற்பட்டுள்ளதாக உணர முடிகிறது. அதேசமயம், பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டு விட்டதா என்பது தெரியவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்