- டாக்டர் கோ. லதா
மலையும் மடுவும் மலரும் வனமும்
மலர்ந்திடும் வானும் மலிந்த கடலும்
இயற்கை தந்த இனிய கொடைகள்
இன்பம் பொழியும் இறைவன் படைப்பு
ஆறு குளிர்ந்து அழகாய் ஓடும்
ஆடி முடிக்கும் அலைகள் பாடும்
காற்று தழுவும் கதிரவன் ஒளி
கானகம் எங்கும் களிநடம் புரியும்
மழையின் துளியில் மண்மணம் கமலும்
மரங்கள் செழிக்க மகிழ்ச்சி பொங்கும்
உயிர்கள் யாவும் ஒன்றாய் வாழும்
உலகின் அழகு இயற்கை தானே
--

மௌனமும் பழகிடு
சொல்லும் செயலும் சுழன்றிடும் வேளை
சோர்வு வரும் சற்றே நிறுத்து
மௌனம் பழகு மனதை தெளிவாய்
மாசு அகற்றும் மருந்தது தானே
ஆரவாரம் அகன்றிடும் நேரம்
ஆழ்மனம் பேசும் அமைதி கேளாய்
கூச்சல் கடந்து குரலொலி வந்து
குவலையும் காக்கும் குருவாய் திகழும்
வார்த்தை வீணாய் வளர்ந்திடும் போது
வாய்மூடி இரு வலிமை பெருகும்
எண்ணம் தெரிய எரிமலை அடங்கும்
இறைவன் அருள் இதயம் நிறையும்
பேசிப் பேசிப் பெரிதும் கெடுத்த
பேதமை நீங்கப் பேரமைதி நாடு
மானிடம் உய்யும் மகத்துவம் காண்பாய்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}