- டாக்டர் கோ. லதா
மலையும் மடுவும் மலரும் வனமும்
மலர்ந்திடும் வானும் மலிந்த கடலும்
இயற்கை தந்த இனிய கொடைகள்
இன்பம் பொழியும் இறைவன் படைப்பு
ஆறு குளிர்ந்து அழகாய் ஓடும்
ஆடி முடிக்கும் அலைகள் பாடும்
காற்று தழுவும் கதிரவன் ஒளி
கானகம் எங்கும் களிநடம் புரியும்
மழையின் துளியில் மண்மணம் கமலும்
மரங்கள் செழிக்க மகிழ்ச்சி பொங்கும்
உயிர்கள் யாவும் ஒன்றாய் வாழும்
உலகின் அழகு இயற்கை தானே
--

மௌனமும் பழகிடு
சொல்லும் செயலும் சுழன்றிடும் வேளை
சோர்வு வரும் சற்றே நிறுத்து
மௌனம் பழகு மனதை தெளிவாய்
மாசு அகற்றும் மருந்தது தானே
ஆரவாரம் அகன்றிடும் நேரம்
ஆழ்மனம் பேசும் அமைதி கேளாய்
கூச்சல் கடந்து குரலொலி வந்து
குவலையும் காக்கும் குருவாய் திகழும்
வார்த்தை வீணாய் வளர்ந்திடும் போது
வாய்மூடி இரு வலிமை பெருகும்
எண்ணம் தெரிய எரிமலை அடங்கும்
இறைவன் அருள் இதயம் நிறையும்
பேசிப் பேசிப் பெரிதும் கெடுத்த
பேதமை நீங்கப் பேரமைதி நாடு
மானிடம் உய்யும் மகத்துவம் காண்பாய்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்
ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
ஏக இறைவனுக்கும்.. அம்மை அப்பனுக்கும் நன்றி செலுத்தி.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 12)
வானவில்!
ரோஜாக்களின் முடிவு!
அலுவலக அவசரம்
Dr Latha Poems: இயற்கையெனும் அழகு.. மெளனமும் பழகிடு
{{comments.comment}}