- டாக்டர் கோ. லதா
மலையும் மடுவும் மலரும் வனமும்
மலர்ந்திடும் வானும் மலிந்த கடலும்
இயற்கை தந்த இனிய கொடைகள்
இன்பம் பொழியும் இறைவன் படைப்பு
ஆறு குளிர்ந்து அழகாய் ஓடும்
ஆடி முடிக்கும் அலைகள் பாடும்
காற்று தழுவும் கதிரவன் ஒளி
கானகம் எங்கும் களிநடம் புரியும்
மழையின் துளியில் மண்மணம் கமலும்
மரங்கள் செழிக்க மகிழ்ச்சி பொங்கும்
உயிர்கள் யாவும் ஒன்றாய் வாழும்
உலகின் அழகு இயற்கை தானே
--

மௌனமும் பழகிடு
சொல்லும் செயலும் சுழன்றிடும் வேளை
சோர்வு வரும் சற்றே நிறுத்து
மௌனம் பழகு மனதை தெளிவாய்
மாசு அகற்றும் மருந்தது தானே
ஆரவாரம் அகன்றிடும் நேரம்
ஆழ்மனம் பேசும் அமைதி கேளாய்
கூச்சல் கடந்து குரலொலி வந்து
குவலையும் காக்கும் குருவாய் திகழும்
வார்த்தை வீணாய் வளர்ந்திடும் போது
வாய்மூடி இரு வலிமை பெருகும்
எண்ணம் தெரிய எரிமலை அடங்கும்
இறைவன் அருள் இதயம் நிறையும்
பேசிப் பேசிப் பெரிதும் கெடுத்த
பேதமை நீங்கப் பேரமைதி நாடு
மானிடம் உய்யும் மகத்துவம் காண்பாய்
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
Short and Sweet Story: ஒரு 5 பைசா படுத்திய பாடு!
Everything had beauty.. ஆனால் எல்லோராலும் காண முடியாதது!
ஆடி மாதம் அம்மன் மாதம்
Short Story: கிணறு ஒரு சுகம்!
ஆடி வெள்ளி!
குமூகத்தில் விந்தையான வியப்பு
Aadi Month: ஆடி பெயர் வந்தது எப்படி?
ஒற்றைக்கால் கொலுசு
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
{{comments.comment}}