விழுப்புரம்: நான் உழைத்து உருவாக்கிய கட்சியை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு நான் தைலாபுரத்தில் டம்மியாக இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனருக்கும், பாமக தலைவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு, பல நாட்களாகியும் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என்னை நிர்பந்தம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அன்புமணிக்கு அதிகாரம் கொடுத்துவிட்டு டம்மியாக இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐயா, ஐயா என்று சென்னவர்களை ராமதாஸ் என்று செல்ல வைத்தது அன்புமணி தான். என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் செல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புமணி வரவில்லை; நான் கதவை அடைக்கவுமில்லை.

அன்புமணி நிறைய பொய்களையும், கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார். கட்சியினரிடம் காசு கொடுத்து என்னை பற்றி தவறாக எழுத சொல்கிறார். வேறு கட்சியினர் இருந்து வந்த வழக்கறிஞர் என்னை ராமதாஸ் என கூறி அழைத்தார். கட்சி அங்கீகாரம் இல்லாமல், சின்னம் இல்லாமல் உள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி, வேட்பாளர் நியமனம் தொடர்பாக நான் தலையேற்று வழி நடத்துகிறேன் என்ற முடிவை எடுத்தேன். ஆனால் இதனை ஏற்க மறுத்த அன்புமணி, நான்தான் தலைவர், கூட்டணியை, வேட்பாளரை நான் தான் முடிவு செய்வேன் என கூறியது தான் பிரச்சினை.
வஞ்சனை, சூது உள்ளிட்டவற்றால் இந்த கட்சியை உறிஞ்சி எடுத்து நான் தான் கட்சி என கூற அன்புமணி துடிக்கிறார். அதனால் தான் நிறுவனர் ஆகிய நான், தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}