சென்னை : அன்புமணி ராமதாஸ் நடத்தும் பாமக பொதுக் கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அதை எதிர்த்து இன்று காலை மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று பொதுக்குழு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
பாமக.,வில் கடந்த சில மாதங்களாகவே அப்பா-மகன் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி தனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என பாமக நிறுவனம் ராமதாஸ் அறிவித்தார். அதற்கு போட்டியாக அன்புமணியும் தனது தலைமையில் பொதுகு்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி நடக்கும் என்றும் அறிவித்தார். அன்புமணி நடத்தும் இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ் மற்றும் அன்புமணியை தனது அறைக்கு நேரில் வரும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மாலை அன்புமணி, நீதிபதி அறைக்கு நேரில் சென்று ஆஜரானார். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி ராமதாஸ் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜரானார். இரு தரப்பினரிடமும் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு முறை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணி நடத்தும் பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதோடு பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் பொதுக்குழுவிற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தார். இதனால் இது தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என கருத்து தெரிவித்தார் அன்புமணி. கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை 11 மணிக்கு மாமல்லபரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அன்புமணி நடத்தும் பொதுக்குழு துவங்குவதற்கு முன் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் இன்று நடக்கும் என அன்பமணி அறிவித்துள்ள பாமக பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}