சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தனித் தொகுதிகளில் பெண்களுக்கான 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின் போது, ஏற்கனவே நடந்த சமூக அநீதி துடைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது; அதன்படியான பிரதிநிதித்துவம் தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு 2029-ஆம் ஆண்டு முதல் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான தடை 2026-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருவது, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்பாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்பது உறுதியாகிறது.
இதற்கு முந்தைய தொகுதிகள் மறுசீரமைப்பு 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்டது. அதில் தான் பெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து கிடந்திருக்க வேண்டிய பட்டியலின மக்களுக்கான மக்களவைத் தனித் தகுதிகளில் 75% வட மாவட்டங்களில் திணிக்கப்பட்டன.
தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 7 மக்களவைத் தனித் தொகுதிகள் இருக்கும். அதன்படி 2009 தேர்தலுக்கு முந்தைய தொகுதிகள் மறுவரையறையிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிதம்பரம், நாகப்பட்டினம், நீலகிரி, தென்காசி ஆகியவை தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
இவற்றில் தென்காசி தென் தமிழகத்திலும், நீலகிரி கொங்கு மண்டலத்திலும் உள்ளன. மீதமுள்ள 5 தொகுதிகளும் வட தமிழகத்தில் தான் அமைந்திருக்கின்றன. தமிழகத்தின் வடக்கு எல்லையான கும்மிடிபூண்டியை உள்ளடக்கிய திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தனித் தொகுதி ஆகும். இந்த தொகுதியின் எல்லை பூவிருந்தவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் முடிவடைவதிலிருந்து சற்று தொலைவில் அடுத்த மக்களவைத் தனித் தொகுதியான காஞ்சிபுரத்தின் எல்லை தொடங்கி விடும்.
காஞ்சிபுரம் தனித் தொகுதியின் எல்லை செய்யூர் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் முடிவடையும் இடத்திலிருந்து வானூர் சட்டப்பேரவைத் தொகுதி தொடங்குகிறது. இது விழுப்புரம் மக்களவைத் தனித்தொகுதிக்குட்பட்டதாகும். தமிழ்நாட்டின் மூன்றாவது மக்களவைத் தனித் தொகுதியான விழுப்புரத்திற்கும், நான்காவது மக்களவைத் தனித் தொகுதியான சிதம்பரத்திற்கும் இடையில் கடலூர் மக்களவைத் தொகுதியின் சிறு பகுதியும், சிதம்பரத்திற்கும், ஐந்தாவது மக்களவைத் தனித் தொகுதியான நாகப்பட்டினத்திற்கும் இடையே மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் சிறு பகுதியும் வருகின்றன.
இந்த இரு துண்டுகளைத் தவிர மேற்குறிப்பிடப்பட்ட 5 மக்களவைத் தனித் தொகுதிகளும் இணைந்தே காணப்படுகின்றன. கடல்வழியாக பார்த்தால் காட்டுப்பள்ளித் துறைமுகத்தில் (திருவள்ளூர்) தொடங்கி நாகப்பட்டினம் ( நாகை) துறைமுகம் வரை 5 தனித் தொகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. வடதமிழகம் மற்றும் காவிரி டெல்டாவின் 66 சட்டப்பேரவை அல்லது 11 மக்களவைத் தொகுதிகளில் 5 மக்களவைத் தனித் தொகுதிகள் வந்துவிடுகின்றன.
அதேநேரத்தில் தமிழகத்தின் ஆறாவது மக்களவைத் தனித் தொகுதியான நீலகிரி சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் எல்லையில் அமைந்துள்ளது. அரக்கோணத்தில் தொடங்கி நீலகிரி வரையிலான 15 மக்களவைத் தொகுதிகள், 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இது ஒன்று மட்டும் தான் தனி மக்களவைத் தொகுதி ஆகும்.
இன்னொருபுறம் தஞ்சாவூரில் தொடங்கி திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை உள்ள 13 மக்களவைத் தொகுதிகள், 78 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே மக்களவைத் தனித் தொகுதி தென்காசி மட்டும் தான். இவற்றில் தென்காசி, நாகை, சிதம்பரம் ஆகியவை நினைவு தெரிந்த நாளில் இருந்து தனித் தொகுதிகளாகவே நீடிக்கின்றன.
தனித்தொகுதிகள் ஒரே பகுதியில் குவிந்திருப்பதால் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியல் சமுதாயத்தவர்களால் மக்களவைக்கு செல்வதைப் பற்றி நினைத்தே பார்க்க முடியாது. அதேபோல், தென்மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியல் சமுதாயத்தினருக்கும் இந்த வாய்ப்பு குறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் அதற்கு முற்றிலும் மாறாக வட மாவட்டங்களில் பிற சமுதாய மக்கள் நாடாளுமன்றத்தில் செல்ல போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இந்த சமூக அநீதிகள் அனைத்தும் தொகுதி மறு சீரமைப்பில் களையப்பட வேண்டும் என்பது தான் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு. அது நிறைவேறும் என்று நம்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}