பிரதமர் மோடி இதைச் செய்ய வேண்டும்.. தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Jun 11, 2024,06:11 PM IST

சென்னை: மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சமூகநீதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மத்தியில் 3வது முறையாக ஆட்சியமைத்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


இந்தியாவின்  பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி  அவர்களுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.




உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான  இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அலங்கரிப்பது  எளிதான ஒன்றல்ல. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள்  மட்டும் தான் இதுவரை அப்பெருமையை பெற்றிருந்தார். எளிய குடும்பத்தில்  பிறந்த நரேந்திர மோடி அவர்கள், நேருவுக்கு அடுத்தபடியாக அந்த சாதனையை  படைத்துள்ள இரண்டாவது பிரதமர் ஆவார்.


இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்த நரேந்திர மோடி அவர்கள், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில்  துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் பயனாக உலகின் ஐந்தாவது  பொருளாதார வல்லரசு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக  அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பொருளாதார  வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்த இலக்கையும்  மோடி அவர்கள் நிச்சயம் வென்றெடுப்பார்.


தமிழ்நாடு எதிர்பார்க்கிறது


மூன்றாவது முறையாக தொடர்ந்து  பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து இந்த நாடு,  குறிப்பாக தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள்தொகை  கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள், மத்திய  அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும்  உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில்  மாநில ஒதுக்கீடு வழங்குதல்,  நீட் விலக்கு  உள்ளிட்ட மாநிலங்களின்   உரிமைகளை அதிகரித்தல் போன்றவை சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற  வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது.


இந்தக் கோரிக்கைகளை கண்டிப்பாக மத்திய  அரசு செய்யும் என்று நம்புகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமக இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி ராமதாஸ் வெல்லும் நிலைக்கு வந்து மயிரிழையில் தோல்வியைத் தழுவினார் என்பது நினைவிருக்கலாம். ஒருவேளை செளமியா அன்புமணி வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் மத்திய அமைச்சராகியிருக்கக் கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்