ஆமா, அரசியலுக்குத் திரும்புகிறேன்.. தமிழ்நாட்டில்தான் போட்டி.. டாக்டர் தமிழிசை அறிவிப்பு!

Mar 18, 2024,08:10 PM IST

சென்னை:  நான் தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.


புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராகவும் இருந்து வருகிறார் டாக்டர் தமிழிசை. தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து சன் செய்தி சானலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டிலிருந்துதான் போட்டியிடுவேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை.


எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம்தான் அறிவிக்கும். ஓரிரு நாளில் தொகுதி எது என்பதை பாஜக மேலிடமே அறிவிக்கும். நான் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் டாக்டர் தமிழிசை. கடைசியாக அவர் 2019 லோக்சபா தேர்தலில் அவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அவர் ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.


டாக்டர் தமிழிசை தென் சென்னை  தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்