சென்னை: நான் தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராகவும் இருந்து வருகிறார் டாக்டர் தமிழிசை. தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சன் செய்தி சானலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டிலிருந்துதான் போட்டியிடுவேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை.
எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம்தான் அறிவிக்கும். ஓரிரு நாளில் தொகுதி எது என்பதை பாஜக மேலிடமே அறிவிக்கும். நான் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் டாக்டர் தமிழிசை. கடைசியாக அவர் 2019 லோக்சபா தேர்தலில் அவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அவர் ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
டாக்டர் தமிழிசை தென் சென்னை தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}