சென்னை: நான் தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்று டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராகவும் இருந்து வருகிறார் டாக்டர் தமிழிசை. தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சன் செய்தி சானலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். தமிழ்நாட்டு அரசியலுக்குத் திரும்புகிறேன். தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டிலிருந்துதான் போட்டியிடுவேன். புதுச்சேரியில் போட்டியிடவில்லை.
எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம்தான் அறிவிக்கும். ஓரிரு நாளில் தொகுதி எது என்பதை பாஜக மேலிடமே அறிவிக்கும். நான் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புகிறார் டாக்டர் தமிழிசை. கடைசியாக அவர் 2019 லோக்சபா தேர்தலில் அவர் தூத்துக்குடியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அவர் ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
டாக்டர் தமிழிசை தென் சென்னை தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}