தாமரை.. வீடு வீடாக மலரத்தான் போகிறது.. அலறத்தான் போகிறீர்கள்.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

Nov 07, 2024,06:28 PM IST

சென்னை: அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள், தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.. என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு பதிலளித்துள்ளார்.


சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் ரூ.12.60 கோடி மதிப்பில்  ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவின் பணிகளை அமைச்சர் சேகர்பாபு  நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பூங்காவில் இதுவரை செய்யப்பட்ட பணிகள் மற்றும் இனிமேல் செய்யப்பட உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை  பூக்களைப் பார்த்து, குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.




இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிரித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை  செளந்தரராஜன் வெகுண்டு, அமைச்சர் சேகர்பாபுவிற்கு பதில் அளிக்கும் விதமாக எக்ஸ் தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 


பூங்காவில், குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது என ஆவேசப்பட்டு இருக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்...


குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே.. வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்..


அரசு அமைக்கும் பூங்காவிலேயே தாமரை வேண்டாம் என ஆவேசப்படும் நீங்கள், தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்..


கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர, மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்.. இது வெறும் சத்தமல்ல சத்தியம் சாத்தியம்.. என்று தனது பாணியில் தமிழில் தெறிக்க விட்டுள்ளார் தமிழிசை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?

news

கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!

news

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்

news

பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை

news

திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!

news

பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்

news

வசீகரிக்கும் ரங்கோலி.. விரல்களுக்குள் வித்தைகளை ஒளித்து வைத்திருக்கும் பத்மாவதி கிஷோர்!

news

தேசத் தந்தை காந்தியும்.. கருப்பு காந்தி கர்மவீரர் காமராஜரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்