புதுச்சேரி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியா 2024ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற வல்லரசாக உருவெடுக்கும் இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கனவு நனவாக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரி மக்களுக்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், இந்திய திருநாட்டின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மக்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மூலமாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க தமது உடல், பொருள், உயிர் அனைத்தையும் தியாகம் செய்த நமது தேசிய தலைவர்களை இந்த நாளில் இணைத்து போற்றுவது நமது தலையாய கடமை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியா 2024ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற வல்லரசாக உருவெடுக்கும் இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சாதனை இலக்கை அடைவதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நாடு நல்லதொரு வளர்ச்சியை எட்ட அது உதவும். நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சனை பேசாம கேப்டனாக்குங்கப்பா.. செமயா சூப்பரா இருக்கும்.. சொல்கிறார் ஸ்ரீகாந்த்!
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
{{comments.comment}}