நியூயார்க்: அளவுக்கு அதிகமாக போதைப் பொருட்களை பயன்படுத்தியதால் 43 வயதான ஆபாசப் பட நடிகையும், அவரது காதலரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜெஸ்ஸி ஜேன்.. 43 வயதாகும் இவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையாவார். ஓக்லஹாமாவில் வசித்து வந்தார். இவரது காதலர் பெயர் பிரெட் ஹாசன்முல்லர். இவர் ஒரு காலத்தில் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர். பின்னர் நடிக்க வந்தார்.. ஆனால் ஆபாசப் பட நடிகையாகி விட்டார். மிகவும் காஸ்ட்லியான ஆபாசப் பட நடிகையாக வலம் வந்தார்.
சமீப காலமாக இவர் போதைக்கு அடிமையாகி விட்டார். போதைப் பொருட்களை அதிக அளவில் எடுத்து வந்துள்ளார். இவருக்கும், இவரது காதலருக்கும் எப்போதும் போதையில் இருப்பதே பொழுது போக்கு என்றாகி விட்டது. இந்த நிலையில்தான் சம்பவத்தன்று அதிக அளவில் போதைப் பொருட்களை பயன்படுத்தி இருவரும் உயிரிழந்த நிலையில் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெஸ்ஸியின் சொந்த ஊர் டெக்ஸாஸ் ஆகும். டேவிட் பிரைடல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு அவர் மாடலிங்கும் செய்துள்ளார். 2003ம் ஆண்டு அவர் ஆபாசப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பேவாட்ச் சீரியலிலும் கூட அவர் நடித்துள்ளார். ஆனால் அதில் அவரது ரோல் மிக சிறிதானது.
ஜெஸ்ஸியின் இயற் பெயர் சிந்தியா ஆன் ஹோவெல். 1980ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பிறந்த அவரது குடும்பம், டெக்சாஸிலிருந்து இடம் பெயர்ந்து ஓக்லஹாமாவுக்கு வந்து செட்டிலானது. இதனால் ஜெஸ்ஸி சிறு வயதிலிருந்தே ஓக்லஹாமாவில்தான் வளர்ந்தார்.
பிளேபாய் சானலுக்காக 2 ஷோக்களையும் இவர் நடத்தியுள்ளார். நாட்டி அமெச்சூர்ஸ் ஹோம் வீடியோஸ் மற்றும் நைட் கால்ஸ் என்ற அந்த இரு ஷோக்களும் பிரபலமானவை. அதற்காக அவருக்கு நிறைய விருதுகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. சில ஹாலிவுட் படங்களிலும் கூட தலை காட்டியுள்ளார் ஜெஸ்ஸி. 2007ம் ஆண்டு முதல் ஆபாசப் படங்களிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஜெஸ்ஸி.
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}