"பெருங்குடி"காரர்களே.. கலாபவன் மணி கதையைப் பாருங்கள்.. விழித்தெழுங்கள், திருந்துங்கள்!

Nov 16, 2023,02:24 PM IST

சென்னை: மலையாள நடிகர் கலாபவன் மணியின் கதையைக் கேட்கவே பகீர் என்று இருக்கிறது. அப்படியே ஈரக்குலையெல்லாம் ஆடிப் போகிறது. அந்த அளவுக்கு மிக மிக மோசமான குடிகாரராக அவர் இருந்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.. கூடவே குடிக்கு அடிமையானவர்களை நினைத்து அயர்ச்சியும் ஏற்படுகிறது.


மலையாளத்தில் பிரபலமான நடிகர் கலாபவன் மணி. தமிழிலும் நிறையப் படங்கள் நடித்துள்ளார். ஜெமினி படம்தான் அவருக்கு மிகப் பெரிய பிரபலத்தைக் கொடுத்தது.  தொடர்ந்து எந்திரன், புதிய கீதை, பாபநாசம், ஜே.ஜே, உனக்கும் எனக்கும், குத்து, வாஞ்சிநாதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. 


2016ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் சடலமாக கிடந்தார் கலாபவன் மணி. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.




இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவரது குடலில் எத்தனால், மெத்தனால் இருந்ததாக கூறப்பட்டது. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதுதொடர்பாக பலரிடம் விசாரணையும் நடத்ததப்பட்டது. சிபிஐயும் விசாரணை நடத்தியது.


இந்த நிலையில் கலாபவன் மணி மரணத்திற்குக் காரணம் அவரேதான் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அளவுக்கு அதிகமாக மது அருந்தி தனது மரணத்தை தானே வரவழைத்துக் கொண்டுள்ளார் மணி என்று விசாரணை அதிகாரியான உன்னி ராஜன் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். தினமும் 10 முதல் 12 பாட்டில் பீர் குடித்து வந்துள்ளார். இதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர் குடியை நிறுத்தவில்லை. விடாமல் குடித்து வந்துள்ளார். 




ரத்த வாந்தி வந்தும் கூட பீர் குடித்து வந்துள்ளார். அவரது ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமாகி மரணம் சம்பவித்தது என்றார்.


குடிபழக்கத்தால் ஒரு மனிதன் எந்த அளவு அடிமையாகி போகிறான் என்பதற்கு உதாரணமாக கலாபவன் மணியின் மரணத்தை எடுத்துக் கூறலாம். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் தான் உடல் நலம் பாதித்தும் கூட, அதைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் விடாமல் குடித்து தனது வாழ்க்கையே இழந்துள்ளார்.


குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது பழைய மொழி. இன்று குடி ஒரு மனிதனின் சிந்தனையையும் சேர்த்து அழித்து விடுகிறது.. அதற்கு கலாபவன் மணி ஒரு உதாரணம்.  மிக மோசமான  குடிப்பழக்கத்தால் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளோம். இவர் பிரபலம்.. குடும்பத்திற்குப் பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை.. ஆனால் சாமானியர்களின் நிலை அப்படியா?


ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் குடிக்கு அடிமையாகி உடல் நலம் பாதித்து இறந்து போனால், அவரது மனைவி, பிள்ளைகளின் வாழ்க்கை நிலை கேள்விக்குறியாக மாறி விடுகிறது. குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படுவது குடிப்பவர் மட்டும் அல்ல. அவரது குடும்பமும் தான். குடிப்பவர் குடித்து விட்டு அவரது வாழ்க்கையை அவருக்கு தெரிந்த விதத்தில் என்ஜாய் செய்து விடுகிறார்.. அதற்கு பரிசாக மரணம்தான் அவருக்கு வந்து சேரும்.. அதை அவர் குடிக்கும்போது உணர்வதே இல்லை.. அவரது கஷ்டம் அத்தோடு முடிந்து விடுகிறது. ஆனால் இறந்தவரின் குடும்பத்தின் நிலை???


ஒரு புறம் பிள்ளைகள் அனாதையாகின்றனர். மனைவி ஆதரவை இழக்கிறார்.. குடும்பமே தள்ளாடும் சோகம் சூழ்கிறது. வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்னரே பிள்ளைகளின் வாழ்க்கை இருண்டு விடுகிறது. சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வாழும் நிலை ஏற்படுகிறது. ஆண் பிள்ளைகள் என்றால் அவர்களும் வாழும் வழி தெரியாது கஞ்சா, குடி பழக்கம் என்று தகப்பன் வழியில் திசை திரும்பும் பலரை நாம் பார்க்கிறோம்..  தந்தை இல்லாமல், தாயும் சிரமப்படும் சூழலில் பெண் பிள்ளைகளும் தவறாகப் போகும் வாய்ப்பையும் நாம் பார்க்கிறோம். 




வாழ வழி தெரியாமல்  பிழைப்பிற்காக பாதை மாறுபவர்கள் ஒருபுறம் இருக்க, காம வெறி கொண்ட மிருகங்களின் கையில் சிக்கி சீரழிபவர்கள் எத்தனை எத்தனையோ பேர். பெரும்பாலான குடிகாரர்கள் பெற்ற பிள்ளைகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது. இது எதுவும் இறந்த குடிகார தந்தைக்கு தெரிய போவதும் இல்லை.


குடிகாரர்களால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்கவே வேண்டாம். தினம் தினம் :சண்டைதான்.. வாழ்க்கை நரகம் தான். ஒரு நல்ல நாள், மாசப்பிறப்பு என்று எதுவுமே அவர்களுக்கு இல்லை. தினமும் வாழ்க்கையில் பேராட்டம் மட்டுமே. தினமும் குடித்து விட்டு வீட்டில் வீம்பாக சண்டை இழுத்து மனைவியை தெருவில் இழுத்து போட்டு அடிக்கும் குடிகாரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. 


குடிக்கும் முன்பு ஒரு நொடி இதை எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்களேன்.. விட்டு விடுங்க பாஸ் இதெல்லாம் வேண்டாம்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.. குடி அழிவுக்கே வித்திடும்.. உஷாரா இருங்க

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்