சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூபாய் 400க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் முருங்கைக்காய் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை கடந்த மாதத்தை விட இந்த மாதம் சற்று அதிகமாகவே உள்ளது. இருப்பினும் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முருங்கைக்காயின் வரத்து குறைவே இதற்கு முக்கிய காரணமாக வணிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இனி சம்பார் வைக்க முருங்கைக்காயை வாங்க முடியாது போல என்று முருங்கைக்காய் பிரியர்கள் புலம்பி வருகின்றனர். ஒரு காலத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓசியாக கொடுத்துக் கொண்டிருந்த இந்த காய் தற்போது காசு கொடுத்து கூட வாங்க முடியாத நிலையாக மாறி விட்டது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் விவசாயத்தை பேணி காக்காதது தான் போலும். இன்றைக்கு முருங்கைக்காய்க்கு வந்த நிலை நாளை மற்ற காய்கறிகளுக்கும் வந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
05.12.2024 இன்றைய காய்கறி விலை....
தக்காளி ரூ 60-100
இஞ்சி 60-130
பீன்ஸ் 30-50
பீட்ரூட் 30-55
பாகற்காய் 40-60
கத்திரிக்காய் 30-60
பட்டர் பீன்ஸ் 60-85
முட்டைகோஸ் 15-30
குடைமிளகாய் 20-55
மிளகாய் 40-60
கேரட் 40-70
காளிபிளவர் 20-40
சௌசௌ 25-50
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 50-90
பூண்டு 220- 540
பச்சை பட்டாணி 150-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 30-40
வெண்டைக்காய் 30-60
மாங்காய் 30-60
மரவள்ளி 30-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 40-80
சின்ன வெங்காயம் 50-80
உருளை 40-80
முள்ளங்கி 20-30
சேனைக்கிழங்கு 20-40
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 20-45
முருங்கைக்காய் 400-420
வாழைக்காய் (ஒன்று) 3-7
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}