சென்னை: தமிழகத்தில் இயல்பை விட அடுத்த ஐந்து தினங்களுக்கு மூன்று முதல் ஐந்து டிகிரி வரை வெப்பநிலை உயருமாம். அதே வேளையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களாக வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. இந்த வெப்பநிலையையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. இன்னும் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மூன்று முதல் ஐந்து டிகிரி வரை வெப்பநிலை உயருமாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் தமிழக பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று முதல் அடுத்த நான்கு தினங்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என அறிவித்துள்ளது.
மழை நிலவரம் (20.4.2024 முதல் 23.4.2024)
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும்.
கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அப்போது இப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் சொல்ல வேண்டாம் அறிவுத்தப்பட்டுள்ளனர்.
20.4.2024 முதல் 26.4.2024 வரை:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகமாக 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும். அதே வேளையில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடுமாம். அப்போது அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌரியம் ஏற்படலாம்.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்சம் வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}