5 உச்ச நடிகர்களுக்கு.. ஒரே நேரத்தில் இசையமைக்கும்.. தேவி ஸ்ரீ பிரசாத்.. நெகிழ்ச்சி!

Mar 19, 2024,03:02 PM IST

சென்னை: அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்திற்கு ஒரே நேரத்தில் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதே எனது கடமையாக கருதுகிறேன் என  நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


தமிழ் திரையுலகில் இனிது இனிது காதல் இனிது திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பவர். இது தவிர இவருடைய பாடல்கள் பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 21 வருடங்களாக 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி ரசிகர்கள் ஒன்றாக கூடும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவது இவருடைய சிறப்பு. 




இவரின் அதிரடி இசையில், இவர் இசையமைக்கும் அனைத்துப் பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஒட்டு மொத்த திரை உலகையே ஈர்த்துள்ளது. இவரை ரசிகர்கள் செல்லமாக டிஎஸ்பி என்று அன்போடு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் இவர் இசையமைத்து வெளிவந்த புஷ்பா திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் முதல் முறையாக ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் ஹிட் கொடுத்தது. இது இவருடைய சாதனைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 


இவருடைய இசையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமே ரசிப்பது மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் ரசித்து கொண்டாடி வருகின்றனர். இவருடைய இசை கடல் கடந்து வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் புகழ்பெற்றிருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது ஐந்து முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு  ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். அதில்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படம், ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்தினம் திரைப்படம், மற்றும் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 ஆகிய படத்திற்கு இசையமைத்து வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.




இது தவிர ஹரிசங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் உஸ்தாத் பகத்சிங், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் தாண்டேல், புது முகங்கள் நடிக்கும் ஜூனியர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இசைஞானி இளையராஜாவின் அதிதீவிர பக்தரான தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கு, சமீபத்தில் இளையராஜா நேரில் சென்று வாழ்த்தி உள்ளார். இது அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இது பற்றி தேவி ஸ்ரீ பிரசாத் கூறுகையில், என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு  எனது மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதே எனது கடமையாக கருதுகிறேன் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

news

வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

news

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா

அதிகம் பார்க்கும் செய்திகள்