Heavy rain alert.. சென்னையில் 8 ஆவின் பாலகங்கள்.. 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு!

Nov 26, 2024,05:54 PM IST

சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில், 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்பட தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக உருவாகிறது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. 




இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாடு கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகத்தில்  நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கக்கடலில் நாளை புயல் உருவாக உள்ள நிலையில் தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு சென்னையில் 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரம் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அதன்படி  கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அண்ணாநகர் டவர், மாதவரம் பால் பண்ணை, வண்ணாந்துரை, பெசன்ட் நகர், வசந்தம் காலனி, அண்ணாநகர் கிழக்கு, சோழிங்கநல்லூர் பால்பண்ணை, விருகம்பாக்கம், சி.பி ராமசாமி சாலை, ஆகிய எட்டு ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும்  இயங்கும். மழைக்காலங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சம் 4 பாக்கெட்டுகள் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவையான அளவு பால் பவுடர் மற்றும் யூ ஹச் டி பால் ஆவின் பாலகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வழக்கத்தை விட கூடுதலாக ஆவின் பால் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் தேவைப்படும் இடங்களில் தற்காலிக பால் விநியோக விற்பனை நிலையம் அமைத்து பால் மற்றும் பால் பவுடர் விற்பனை செய்யப்படும். பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி பால் விநியோகம் செய்ய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

news

ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?

news

தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி

news

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

news

ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்

news

ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!

news

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!

news

எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

அதிகம் பார்க்கும் செய்திகள்