அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டம்.. கொளத்தூரில் தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்

Feb 20, 2025,01:25 PM IST

சென்னை: ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுத கரங்கள் அன்னதானத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.


திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் அமுத கரங்கள் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் உணவு வழங்கப்பட உள்ளது. 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிட்டுள்ளது.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளாகும். முதல்வரின் பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக  கொண்டாட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். 


இந்நிலையில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு வருடம் முழுவதும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு தினமும் உணவளிக்கும் வகையில் அமுத கரங்கள் என்ற  திட்டத்தை இன்று முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவினை தொடங்கி வைத்த பிறகு துர்கா ஸ்டாலின் மற்றும் சென்னை மேயர் பிரியா  உணவு வழங்கினார்கள். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365நாட்களும், இந்த திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்

news

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு

news

முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!

news

'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!

news

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!

news

எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்

news

சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!

news

கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்

news

குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்