சென்னை: ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுத கரங்கள் அன்னதானத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் அமுத கரங்கள் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் உணவு வழங்கப்பட உள்ளது. 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளாகும். முதல்வரின் பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு வருடம் முழுவதும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு தினமும் உணவளிக்கும் வகையில் அமுத கரங்கள் என்ற திட்டத்தை இன்று முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவினை தொடங்கி வைத்த பிறகு துர்கா ஸ்டாலின் மற்றும் சென்னை மேயர் பிரியா உணவு வழங்கினார்கள். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365நாட்களும், இந்த திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}