சென்னை: ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுத கரங்கள் அன்னதானத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் அமுத கரங்கள் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் உணவு வழங்கப்பட உள்ளது. 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளாகும். முதல்வரின் பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு வருடம் முழுவதும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு தினமும் உணவளிக்கும் வகையில் அமுத கரங்கள் என்ற திட்டத்தை இன்று முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவினை தொடங்கி வைத்த பிறகு துர்கா ஸ்டாலின் மற்றும் சென்னை மேயர் பிரியா உணவு வழங்கினார்கள். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365நாட்களும், இந்த திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
தலைமைச் செயலகத்தில் புகுந்து போராட முயன்றது ஏன்.. அறிவு விளக்கம்
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
{{comments.comment}}