சென்னை: ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுத கரங்கள் அன்னதானத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் அமுத கரங்கள் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் உணவு வழங்கப்பட உள்ளது. 365 நாட்களும் நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் விழா வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளாகும். முதல்வரின் பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு வருடம் முழுவதும், நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு தினமும் உணவளிக்கும் வகையில் அமுத கரங்கள் என்ற திட்டத்தை இன்று முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொளத்தூரில் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவினை தொடங்கி வைத்த பிறகு துர்கா ஸ்டாலின் மற்றும் சென்னை மேயர் பிரியா உணவு வழங்கினார்கள். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி வரை 365நாட்களும், இந்த திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கப்பட உள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}