டெல்லி: ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்குப் பதில் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநில சட்டசபைக்கும், ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் சமீபத்தில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக, செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹரியானா சட்டசபைத் தேர்தல் தேதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்குப் பதில் 5ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கையும் 4ம் தேதிக்குப் பதில் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிஷ்னோய் சமூக மக்கள் வருடா வருடம் ஆசோஜ் அமாவாசை விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்த முறை தேர்தல் தேதியையொட்டி அது வந்ததால் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதை மதித்து தேர்தல் தேதி மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}