டெல்லி: ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்குப் பதில் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநில சட்டசபைக்கும், ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் சமீபத்தில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஹரியானாவில் அக்டோபர் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாக, செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹரியானா சட்டசபைத் தேர்தல் தேதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதிக்குப் பதில் 5ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஹரியானா, ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கையும் 4ம் தேதிக்குப் பதில் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிஷ்னோய் சமூக மக்கள் வருடா வருடம் ஆசோஜ் அமாவாசை விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இந்த முறை தேர்தல் தேதியையொட்டி அது வந்ததால் தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதை மதித்து தேர்தல் தேதி மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}