பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில், வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான விரிவான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பர்தா அணிந்த பெண்களின் வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பர்தா அணிந்த பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பெண் வாக்குச்சாவடி அதிகாரிகள் அல்லது உதவியாளர்கள் முன்னிலையில் அவர்களின் தனியுரிமையை உறுதிசெய்து, கண்ணியமான முறையில் அடையாளத்தை சரிபார்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் கீழ், வாக்காளர்களின் அடையாளத்தை எளிதாக்கவும், வாக்குச்சாவடிகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை (EPICs) வழங்க தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது. பீகாரில் உள்ள கிட்டத்தட்ட 100% வாக்காளர்களுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் எட்டு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கும் ஏற்கனவே EPIC அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்களுக்கு, தேர்தல் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் EPIC அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
EPIC அட்டையை வழங்க முடியாத வாக்காளர்களுக்கு, ஆதார் அட்டைகள், MNREGA வேலை அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு புத்தகங்கள், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள், பான் கார்டுகள், இந்திய பாஸ்போர்ட்டுகள், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், அரசு சேவை அடையாள அட்டைகள், அதிகாரப்பூர்வ MP/MLA/MLC அடையாள அட்டைகள் மற்றும் தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள (UDID) அட்டைகள் உள்ளிட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அக்டோபர் 7, 2025 அன்று அனுமதித்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது வாக்களிப்பதற்கு அவசியம் என்றும் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!
அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!
முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்
இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!
தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!
நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
{{comments.comment}}