பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில், வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான விரிவான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பர்தா அணிந்த பெண்களின் வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பர்தா அணிந்த பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பெண் வாக்குச்சாவடி அதிகாரிகள் அல்லது உதவியாளர்கள் முன்னிலையில் அவர்களின் தனியுரிமையை உறுதிசெய்து, கண்ணியமான முறையில் அடையாளத்தை சரிபார்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் கீழ், வாக்காளர்களின் அடையாளத்தை எளிதாக்கவும், வாக்குச்சாவடிகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை (EPICs) வழங்க தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது. பீகாரில் உள்ள கிட்டத்தட்ட 100% வாக்காளர்களுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் எட்டு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கும் ஏற்கனவே EPIC அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்களுக்கு, தேர்தல் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் EPIC அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
EPIC அட்டையை வழங்க முடியாத வாக்காளர்களுக்கு, ஆதார் அட்டைகள், MNREGA வேலை அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு புத்தகங்கள், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள், பான் கார்டுகள், இந்திய பாஸ்போர்ட்டுகள், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், அரசு சேவை அடையாள அட்டைகள், அதிகாரப்பூர்வ MP/MLA/MLC அடையாள அட்டைகள் மற்றும் தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள (UDID) அட்டைகள் உள்ளிட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அக்டோபர் 7, 2025 அன்று அனுமதித்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது வாக்களிப்பதற்கு அவசியம் என்றும் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}