பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில், வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான விரிவான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, பர்தா அணிந்த பெண்களின் வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பர்தா அணிந்த பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பெண் வாக்குச்சாவடி அதிகாரிகள் அல்லது உதவியாளர்கள் முன்னிலையில் அவர்களின் தனியுரிமையை உறுதிசெய்து, கண்ணியமான முறையில் அடையாளத்தை சரிபார்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 இன் கீழ், வாக்காளர்களின் அடையாளத்தை எளிதாக்கவும், வாக்குச்சாவடிகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை (EPICs) வழங்க தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது. பீகாரில் உள்ள கிட்டத்தட்ட 100% வாக்காளர்களுக்கும், இடைத்தேர்தல் நடைபெறும் எட்டு தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கும் ஏற்கனவே EPIC அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்களுக்கு, தேர்தல் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் EPIC அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
EPIC அட்டையை வழங்க முடியாத வாக்காளர்களுக்கு, ஆதார் அட்டைகள், MNREGA வேலை அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு புத்தகங்கள், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள், பான் கார்டுகள், இந்திய பாஸ்போர்ட்டுகள், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், அரசு சேவை அடையாள அட்டைகள், அதிகாரப்பூர்வ MP/MLA/MLC அடையாள அட்டைகள் மற்றும் தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள (UDID) அட்டைகள் உள்ளிட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அக்டோபர் 7, 2025 அன்று அனுமதித்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது வாக்களிப்பதற்கு அவசியம் என்றும் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}