அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்

Nov 20, 2025,05:15 PM IST
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் மாத இறுதியில், அதாவது நவம்பர் 27 அல்லது 28 ஆம் தேதி அன்று, திருவள்ளூரில் இருந்து தனது தொகுதி வாரியான பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார். 

வட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, வானிலை நிலவரத்தைப் பொறுத்து இந்த அட்டவணை மாற்றியமைக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, 41 பேர் உயிரிழந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது மக்கள் சந்திப்பு பயணத்தை நிறுத்தி வைத்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது பயணத்தை அவர் தொடங்கப் போகிறார். மக்களைக் காப்போம்; தமிழ்த்தாயை மீட்போம் என்ற பெயரில் ஜூலை மாதம் கோவையில் தொடங்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரம், இதுவரை 174 சட்டமன்றத் தொகுதிகளை எட்டியுள்ளது. 






தனது பிரச்சாரக் கூட்டங்களில் திமுக அரசை கடுமையாக சாடிப் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. குறிப்பாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பணவீக்கம், ஊழல், வாரிசு அரசியல் மற்றும் தொழில் தேக்கம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி வருகிறாார். 

தனது அடுத்த கட்ட பிரச்சாரத்தில் மக்களின் வாழ்க்கை நிலைமைகள், அடிப்படை வசதிகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவை குறித்து எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டக் கூடும் என்று தெரிகிறது. கூடவே திமுக அரசை சாடுவதையும் அவர் தொடரக் கூடும். 

திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மீதமுள்ள தொகுதிகளை ஒரு நாளைக்கு இரண்டு என்ற வீதத்தில் அவர் நிறைவு செய்ய இலக்கு வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்