வாக்குப்பலிதம் (ஒரு நிமிடக் கதை)

Mar 05, 2026,02:09 PM IST

- பூரணவள்ளி சேகர்


இரவு நடுநிசி நேரம் வெளியில் ஒரு குடுப்பைக்காரன்  வாக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கவிதாவும் கண்ணனும் சிறிது பயந்தனர்.   அவன்  சொன்னதில் இந்தத் தெருவில் இன்று ஒரு மரணம் ஏற்படும் என்று சொன்னது மட்டும் காதில் விழுந்தது. மற்றவை ஒன்றும் புரியாமல் இருந்தனர். 


அவர்களுக்கு அந்தத் தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் கமலா பாட்டிதான் நினைவில் வந்தாள். கடந்த ஒரு வாரமாக கமலா பாட்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். இரவில் வந்த குடுகுடுப்பைக்காரன் மீண்டும் மறுநாள் காலையில் வந்து முதல் நாள் இரவில் கூறியனவற்றைக் கூறிச் சென்றான்.




கண்ணன் அவசர வேலை இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு சீக்கிரமாகக் கிளம்பிச் சென்றான். இடையிடையே இரவில் கேட்ட வார்த்தைகள் நிழலாடின. பிற்பகலில் அலுவலக வேலைகளுக்கு இடையே அதை மறந்தான். வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது அந்தத் தெருவில் உள்ள பலர் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தனர்.  அதைக் கண்ட கண்ணனுக்கு  கமலா பாட்டியின் நினைவு வந்தது. 


வீட்டிற்குள் நுழைந்த கண்ணன் கவிதாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தான். காலையில் குறி கூறிய குடுகுடுப்பைக்காரன் அந்த வழியாக வந்த பிரேக் பிடிக்காத லாரியில் அடிபட்டு இறந்து விட்டதாகக் கவிதா கூறினாள்.


குடுகுடுப்பைக்காரனின் வாக்குப்  பலித்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இவர்கள் பிரிந்து விட மாட்டார்களா என ஏங்கிய எதிரிகளின் கனவு தூளானது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திமுக ஆட்சியில் மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

news

முடிவான திமுக-காங்கிரஸ் கூட்டணி...ஏமாற்றத்தில் தவெக...அடுத்து என்ன செய்ய போகிறார் விஜய்?

news

மனதின் சக்தி

news

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ்குமார்.. மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரிட்டர்ன்!

news

ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., தேமுதிக வேட்புமனு தாக்கல்!

news

இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுறுவிய அமெரிக்கா.. இலங்கை எம்.பி. கவலை

news

நீரே.. நீ எங்கள் வளமே!

news

ஆற்றலை சேமிப்போம் உலகை பாதுகாப்போம்.. World Energy Efficiency Day

அதிகம் பார்க்கும் செய்திகள்