சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கும். தேர்தல் முடிவுகள் ஜூன் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தமிழக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும எம்.பிக்களாக தேர்வு முடியும். இதில் திமுக தனது நான்கு வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் தரப்பட்டுள்ளது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு குறித்து இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.மூத்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருக்கிறார். மாநிலங்களவை எம்பிக்களாக அதிமுகவுக்கு இரண்டு சீட் கிடைக்கும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிக கோரியபடி, ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}