சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்கும். தேர்தல் முடிவுகள் ஜூன் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தமிழக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும எம்.பிக்களாக தேர்வு முடியும். இதில் திமுக தனது நான்கு வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு சீட் தரப்பட்டுள்ளது. திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு குறித்து இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.மூத்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இருக்கிறார். மாநிலங்களவை எம்பிக்களாக அதிமுகவுக்கு இரண்டு சீட் கிடைக்கும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிக கோரியபடி, ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூற வேண்டும்: திருமாவளவன்
செங்கோடையன் பேச்சு... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
Unified ADMK: செங்கோட்டையன் கருத்துக்கு பெருகும் ஆதரவு.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?
செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் மறுத்தால்.. திமுக, தவெகவுக்கு சாதகமாகும் களம்!
செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக இரத்தம் தான் என்பதை நிரூபித்துவிட்டார்: சசிகலா
பிரிந்து சென்றவர்கள் என்றால்.. நயினார் நாகேந்திரன் முதல் செந்தில் பாலாஜி வரை பெரிய லிஸ்ட்டாச்சே!
{{comments.comment}}