மும்பை விமான நிலையத்தில் அதிர்ச்சி..  சக்கர நாற்காலி பற்றாக்குறையால் உயிரிழந்த முதியவர்!

Feb 16, 2024,05:46 PM IST

மும்பை: மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார் ஒரு முதியவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக, மும்பையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் மும்பைக்கு வரும்முன்பே இரண்டு இரு சக்கர நாற்காலிகளை முன் பதிவு செய்துள்ளார். 




மும்பை வந்து சேர்ந்த பிறகு 2 சக்கர நாற்காலி கிடைக்கவில்லை. வீல்சேருக்குப் பற்றாக்குறை இருப்பதாக கூறி ஒன்றை மட்டுமே ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ளது. இதையடுத்து அதில், தனது மனைவியை அமர வைத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அந்த முதியவர். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து வந்துள்ளார். அபொழுது, அவர் திடீரென நிலைகுலைந்து  கீழே விழுந்தார். 


அருகில் இருந்தவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டுக்கு செல்லாமல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 


இது குறித்து மும்பை விமானநிலையத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், சக்கர நாற்காலி பற்றாக்குறை காரணமாக அவர்களுள் ஒருவருக்கு மட்டுமே சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மனைவி சக்கர நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவரைத் தொடர்ந்து நடந்து செல்ல கணவர் முடிவு செய்தார். கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் நடந்த அவர் இமிகிரேஷன் பகுதியை அடைந்தார். அங்கு சென்றதும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே விமான நிலைய மருத்துவ கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.


மும்பை விமான நிலையத்தில் 80 வயது பயணி நடக்க விடப்பட்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்