மும்பை: மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி தட்டுப்பாடு காரணமாக நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார் ஒரு முதியவர். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக, மும்பையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். நியூயார்க்கில் இருந்து தனது மனைவியுடன் மும்பைக்கு வரும்முன்பே இரண்டு இரு சக்கர நாற்காலிகளை முன் பதிவு செய்துள்ளார்.
மும்பை வந்து சேர்ந்த பிறகு 2 சக்கர நாற்காலி கிடைக்கவில்லை. வீல்சேருக்குப் பற்றாக்குறை இருப்பதாக கூறி ஒன்றை மட்டுமே ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ளது. இதையடுத்து அதில், தனது மனைவியை அமர வைத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அந்த முதியவர். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து வந்துள்ளார். அபொழுது, அவர் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டுக்கு செல்லாமல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இது குறித்து மும்பை விமானநிலையத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், சக்கர நாற்காலி பற்றாக்குறை காரணமாக அவர்களுள் ஒருவருக்கு மட்டுமே சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. மனைவி சக்கர நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவரைத் தொடர்ந்து நடந்து செல்ல கணவர் முடிவு செய்தார். கிட்டத்தட்ட 1.5 கிலோமீட்டர் நடந்த அவர் இமிகிரேஷன் பகுதியை அடைந்தார். அங்கு சென்றதும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்தார். உடனே விமான நிலைய மருத்துவ கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் 80 வயது பயணி நடக்க விடப்பட்டு மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}