சென்னை: 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதன் எதிரொலியாக தேர்தல் நடைபெறும் போது தொடர்ந்து 48 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை மூட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்புகள் வெளி வந்ததில் இருந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை கட்சிகள் முடித்துள்ளன. தற்பொழுது வேட்பாளர்கள் பட்டியல்களும் வெளியிட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்திலும் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்லை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளும், நடத்தை விதிமுறைகளும் தற்போது அமலில் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக்கடைகளை மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
{{comments.comment}}