சென்னை: 2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதன் எதிரொலியாக தேர்தல் நடைபெறும் போது தொடர்ந்து 48 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை மூட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்புகள் வெளி வந்ததில் இருந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகளை கட்சிகள் முடித்துள்ளன. தற்பொழுது வேட்பாளர்கள் பட்டியல்களும் வெளியிட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரத்திலும் சில கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்லை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் பல்வேறு கட்டுப்பாடுகளும், நடத்தை விதிமுறைகளும் தற்போது அமலில் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதே போல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக்கடைகளை மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!
கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி
தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!
India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா
T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!
இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!
ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!
பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!
அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!
{{comments.comment}}