5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.. சட்டிஸ்கருக்கு 2 கட்டம்.. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டம்!

Oct 09, 2023,12:55 PM IST

டெல்லி: தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி சட்டிஸ்கர் மாநில சட்டசபைக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.


5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதி விவரம்:


மிஸோரம் சட்டசபை தேர்தல் - நவம்பர் 7ம் தேதி தேர்தல்


மத்தியப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 17


சட்டிஸ்கர் மாநில சட்டசபை  தேர்தல் - நவம்பர் 7 மற்றும் 17 




தெலங்கானா -  நவம்பர் 30


ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 23


வாக்கு எண்ணிக்கை:   டிசம்பர் 3


மிஸோரம் மாநில சட்டசபையின் ஆயுள் காலம் டிசம்பர் 17ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாநிலங்களுக்கு ஜனவரி மாதத்தில் பல்வேறு தேதிகளில் முடிவடையவுள்ளது.  மிஸோரத்தில் மிஸோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாஜக ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.


5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்த முறை மொத்தம் 60 லட்சம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர். அதாவது இவர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள்.  முற்றிலும் இளைஞர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படும் 2900 வாக்குச் சாவடிகளை இந்த ஐந்து மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் அமைக்கவுள்ளது.


சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை விவரம்:


மத்தியப் பிரதேசம்  - 230 தொகுதிகள்

ராஜஸ்தான் - 230 தொகுதிகள்

தெலங்கானா - 119 தொகுதிகள்

சட்டிஸ்கர் - 90 தொகுதிகள்

மிஸோரம் - 40 தொகுதிகள்


மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 16.14 கோடி

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்