டெல்லி: தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி சட்டிஸ்கர் மாநில சட்டசபைக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.
5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதி விவரம்:
மிஸோரம் சட்டசபை தேர்தல் - நவம்பர் 7ம் தேதி தேர்தல்
மத்தியப் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 17
சட்டிஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 7 மற்றும் 17
தெலங்கானா - நவம்பர் 30
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் - நவம்பர் 23
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மிஸோரம் மாநில சட்டசபையின் ஆயுள் காலம் டிசம்பர் 17ம் தேதி முடிவடைகிறது. மற்ற மாநிலங்களுக்கு ஜனவரி மாதத்தில் பல்வேறு தேதிகளில் முடிவடையவுள்ளது. மிஸோரத்தில் மிஸோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாஜக ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
5 மாநில சட்டசபைத் தேர்தலில் இந்த முறை மொத்தம் 60 லட்சம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர். அதாவது இவர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். முற்றிலும் இளைஞர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படும் 2900 வாக்குச் சாவடிகளை இந்த ஐந்து மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் அமைக்கவுள்ளது.
சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை விவரம்:
மத்தியப் பிரதேசம் - 230 தொகுதிகள்
ராஜஸ்தான் - 230 தொகுதிகள்
தெலங்கானா - 119 தொகுதிகள்
சட்டிஸ்கர் - 90 தொகுதிகள்
மிஸோரம் - 40 தொகுதிகள்
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 16.14 கோடி
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}