நான் மட்டும் இல்லாட்டி ஜெயிச்சிருக்கவே மாட்டீங்க.. டிரம்ப் மீது கோபம் காட்டிய எலான் மஸ்க்!

Jun 06, 2025,12:56 PM IST

வாஷிங்டன்: நண்பனே எனது உயிர் நண்பனே என்று பாடாத குறையாக நெருக்கமான நட்புடன் வலம் வந்து கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப்பும், எலான் மஸ்க்கும் அதிரடியாக பிரிந்துள்ளனர். அதிலும் டிரம்ப் மீது கடும் கோபத்தைக் கக்கியுள்ளார் எலான் மஸ்க். நான் மட்டும் இல்லாட்டி டிரம்ப் ஜெயித்திருக்கவே முடியாது என்றும் அவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மஸ்க்.


எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே ஒரு காலத்தில் இருந்த நட்பு, கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது பகையாக மாறியுள்ளது. டிரம்ப் அரசாங்கத்தின் கொள்கைகளை மஸ்க் விமர்சித்ததும், பதிலுக்கு டிரம்ப் மஸ்கை தாக்கியதும் இந்த மோதலுக்குக் காரணம். இந்த மோதல் அமெரிக்க அரசியல், வணிகம் மற்றும் விண்வெளி கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.


சில நாட்களுக்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது எலான் மஸ்க் அவரைப் புகழ்ந்தார். டிரம்ப், மஸ்கை "உலகின் தலைசிறந்த வணிகத் தலைவர்களில் மற்றும் புதுமைப்பித்தர்களில் ஒருவர்" என்று அழைத்தார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி டிரம்ப்பை "அரச பதவிக்கு தகுதியானவர்" என்று பாராட்டினார்.




இருப்பினும், அவர்களின் உறவில் விரிசல் விழுந்தது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டனர். சிபிஎஸ் தொலைக்காட்சி சானலுடனான ஒரு நேர்காணலில், மஸ்க் டிரம்ப்பின் முன்மொழியப்பட்ட சட்டத்தை விமர்சித்தார். இது ஒரு "பெரும் செலவு மசோதா" என்றும், இது கூட்டாட்சி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்றும், தனது DOGE குழுவின் செயல்திறனை தடுக்கும் என்றும் கூறினார்.


ஒரு மசோதா பெரியதாகவோ அல்லது அழகாகவோ இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது இரண்டையும் கொண்டிருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை என்றார் மஸ்க்.  மறுபக்கம், எலான் மற்றும் எனக்கு ஒரு சிறந்த உறவு இருந்தது. இனிமேல் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. என்று கூறியிருந்தார் டிரம்ப்.


டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்திலும், மஸ்க் எக்ஸ் தளத்திலும் கருத்துக்களை பதிவிட்டனர். இதில் இப்போது ஒரு படி மேலே போய் கடும் அனல் கக்கியுள்ளார் மஸ்க். டிரம்ப் 2024 தேர்தலில் வெற்றிபெற தான் காரணம். நான் இல்லையென்றால், டிரம்ப் தேர்தலில் தோற்றிருப்பார். ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையை கட்டுப்படுத்துவார்கள், குடியரசுக் கட்சியினர் செனட்டில் 51-49 ஆக இருப்பார்கள் என்று கூறியுள்ளார் மஸ்க்.


டிரம்ப், மஸ்க்கின் சண்டை எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக டிரம்ப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் கடும் விமர்சனத்தைப்  பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

என் நினைவில் ஒரு காதல் அலை.. கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி (2)

news

உலகின் முன்னோடி முதலமைச்சர்கள் மூவர்.. சிவ அறஞானிகள்.. யார் என்று தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 15, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

news

என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்

news

Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா

news

C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்