"என் மனசு புயல் மாதிரி".. அதான் எப்பப் பார்த்தாலும் பரபரப்பாவே இருக்காரோ எலான் மஸ்க்?

Nov 12, 2023,10:40 AM IST

கலிபோர்னியா: எனது மனசு புயல் மாதிரி. எப்பவும் அலையடித்துக் கொண்டே இருக்கும். அதை சமாளிக்க நான் நாடுவது வீடியோ கேம்ஸ் என்று கூறியுள்ளார் டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்.


உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவன அதிபர். அதுபோக டிவிட்டர் உரிமையாளரும் கூட. மேலும் நிறைய பிசினஸ்களில் ஈடுபட்டிருப்பவர். எப்போதும் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து வரும் எலான் மஸ்க் தன்னைப் பற்றிய தனிப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.




இதுதொடர்பாக அவர் லெக் பிரைட்மேன் என்ற தொலைக்காட்சி செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:


எனது மனசு ஒரு புயல் மாதிரி. எப்பவும் அது இருந்துட்டே இருக்கும். அலையடிச்சுட்டே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் மனதை அமைதிப்படுத்த நான் நாடுவது வீடியோ கேம்ஸ்தான்.  வீடியோ கேம்ஸ் விளையாடும்போது அதில் லயித்துப் போய் எனது சிந்தனைகளும், மனசும் அமைதியாகி விடும். ஒருநிலைப்படும். புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பும் கிடைக்கும்.  


நான் நிறைய வீடியோ கேம்ஸ் விளையாடியுள்ளேன்.  உண்மையில் அதுதான் எனது மிகப் பெரிய பொழுதுபோக்கும் கூட. 


நிறையப் பேருக்கு என்னைப் பிடி்காது.  காரணம் அவர்களுக்கு எனது மனது புரிவதில்லை. புரியும்படி நானும் நடந்து கொள்வதில்லை. புரியாதவர்களுக்கு எப்படி நம்மளைப் பிடிக்கும் என்றார் எலான் மஸ்க்.


எலான் மஸ்க்குக்குப் பிடித்த  ஒரு வீடியோ கேம்ஸின் பெயர் தி பேட்டில் ஆப் பாலிடோப்பியா. அது ஒரு நாகரீகம் குறித்த வீடியோ விளையாட்டு ஆகும். போர் விளையாட்டும் கூட. அதைத்தான் ரொம்ப விரும்பி ஈடுபடுவாராம் எலான் மஸ்க். இதை அவரது மனைவி கிரிம்ஸ் கூறியுள்ளார்.


ஒரு நாள் இரவு எல்டன் ரிங் என்ற வீடியோ கேம்ஸ் ஆட உட்கார்ந்துள்ளார் எலான் மஸ்க். அது அடுத்த நாள் காலை 5 மணி வரை நீடித்துள்ளது. அன்றுதான் அவர் டிவிட்டரை வாங்கும் முடிவை எடுத்தாராம். அந்த விளையாட்டுதான் அவருக்கு டிவிட்டரை வாங்கும் முடிவுக்கு உந்தித் தள்ளியதாக எலான் மஸ்க் பின்னர் கிரிம்ஸிடம் தெரிவித்தாராம்.


ரைட்டு தல!

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்