கலிபோர்னியா: எனது மனசு புயல் மாதிரி. எப்பவும் அலையடித்துக் கொண்டே இருக்கும். அதை சமாளிக்க நான் நாடுவது வீடியோ கேம்ஸ் என்று கூறியுள்ளார் டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்.
உலகப் பெரும் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவன அதிபர். அதுபோக டிவிட்டர் உரிமையாளரும் கூட. மேலும் நிறைய பிசினஸ்களில் ஈடுபட்டிருப்பவர். எப்போதும் பரபரப்பான வாழ்க்கையில் இருந்து வரும் எலான் மஸ்க் தன்னைப் பற்றிய தனிப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் லெக் பிரைட்மேன் என்ற தொலைக்காட்சி செய்தியாளருக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது மனசு ஒரு புயல் மாதிரி. எப்பவும் அது இருந்துட்டே இருக்கும். அலையடிச்சுட்டே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் மனதை அமைதிப்படுத்த நான் நாடுவது வீடியோ கேம்ஸ்தான். வீடியோ கேம்ஸ் விளையாடும்போது அதில் லயித்துப் போய் எனது சிந்தனைகளும், மனசும் அமைதியாகி விடும். ஒருநிலைப்படும். புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பும் கிடைக்கும்.
நான் நிறைய வீடியோ கேம்ஸ் விளையாடியுள்ளேன். உண்மையில் அதுதான் எனது மிகப் பெரிய பொழுதுபோக்கும் கூட.
நிறையப் பேருக்கு என்னைப் பிடி்காது. காரணம் அவர்களுக்கு எனது மனது புரிவதில்லை. புரியும்படி நானும் நடந்து கொள்வதில்லை. புரியாதவர்களுக்கு எப்படி நம்மளைப் பிடிக்கும் என்றார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்குக்குப் பிடித்த ஒரு வீடியோ கேம்ஸின் பெயர் தி பேட்டில் ஆப் பாலிடோப்பியா. அது ஒரு நாகரீகம் குறித்த வீடியோ விளையாட்டு ஆகும். போர் விளையாட்டும் கூட. அதைத்தான் ரொம்ப விரும்பி ஈடுபடுவாராம் எலான் மஸ்க். இதை அவரது மனைவி கிரிம்ஸ் கூறியுள்ளார்.
ஒரு நாள் இரவு எல்டன் ரிங் என்ற வீடியோ கேம்ஸ் ஆட உட்கார்ந்துள்ளார் எலான் மஸ்க். அது அடுத்த நாள் காலை 5 மணி வரை நீடித்துள்ளது. அன்றுதான் அவர் டிவிட்டரை வாங்கும் முடிவை எடுத்தாராம். அந்த விளையாட்டுதான் அவருக்கு டிவிட்டரை வாங்கும் முடிவுக்கு உந்தித் தள்ளியதாக எலான் மஸ்க் பின்னர் கிரிம்ஸிடம் தெரிவித்தாராம்.
ரைட்டு தல!
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}