டிவிட்டர் ஊழியர்கள் டிஸ்மிஸ் தொடர்கிறது.. வாக்குறுதியை மீறினார் எலான் மஸ்க்

Feb 23, 2023,01:49 PM IST
கலிபோர்னியா: டிவிட்டரில் இனி ஆட்குறைப்பு இருக்காது என்று கூறியிருந்தார் எலான் மஸ்க். ஆனால் தற்போது வரை ஆட்குறைப்பு அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.



டிவிட்டரை தற்போது எலான் மஸ்க்தான் வைத்துள்ளார். அவர் வசம் வந்ததும் டிவிட்டரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக பார்க்கப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த நவம்பர் மாதம் யாரும்  எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கானோரை அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார் எலான் மஸ்க்.


கிட்டத்தட்ட மூன்றில் 2 மடங்கு ஊழியர்களை அவர் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். அதன் பின்னர் மீண்டும் ஆட்குறைப்பு இருக்காது.. மாறாக ஊழியர்களை சேர்க்கப் போகிறோம் என்று கூறியிருந்தார் எலான் மஸ்க். விளம்பரம் மற்றும் என்ஜீனியரிங் பிரிவில் தகுதியானவர்கள் கிடைத்தால் நீங்கள் பரிந்துரைக்கலாம் என்று கூட தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் மஸ்க்.

ஆனால் டிவிட்டரில் இன்னும் ஆட்குறைப்பு நின்றபாடில்லையாம். அவ்வப்போது சிலரை நீக்கிக் கொண்டுதான் உள்ளனராம். கடந்த வாரம் கூட 12 பேர் வரை நீக்கப்பட்டார்களாம். அதில் ஒருவர் நேரடியாக மஸ்க்குக்கே ரிப்போர்ட் செய்யும் அதிகாரி ஆவார். அவர் டிவிட்டரின் விளம்பர வர்த்தகப் பிரில் முக்கியப் பொறுப்பில் இருந்தவராம்.

சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்த 3 அலுவலகங்களில் இரண்டை மூட உத்தரவிட்டார் மஸ்க். அதில் வேலை பார்த்து வந்த ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இதையடுத்து டெல்லி மற்றும் மும்பையில் இருந்த டிவிட்டர் அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. கடந்த நவம்பர் மாத ஊழியர்கள் நீக்கத்தின்போது இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். இது இந்தியாவில் உள்ள டிவிட்டர் பணியாளர்களில் 90 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்