சான்பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் தளத்தை, தன்னுடைய எக்ஸ்ஏஐ நிறுவனத்திற்கு விற்று விட்டார். 33 பில்லியன் டாலர் மதிப்புக்கு இந்த பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். மேலும் இரு நிறுவனங்களும் இனி இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் இனி செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக மாறும். மிகப் பெரிய வளர்ச்சியையும் அது காணும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளம் முன்பி டிவிட்டர் என்று அழைக்கப்பட்டது. அதை எலான் மஸ்க் வாங்கி எக்ஸ் என்று பெயர் மாற்றினார். எக்ஸ் தளத்தில் தற்போது 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். உலகின் முன்னணி சமூக வலைதளமாக இது திகழ்கிறது. இந்த நிலையில்தான் இதை வேறு லெவலில் வளர்க்க வேண்டும் என்பதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எக்ஸ் ஏஐ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார் எலான் மஸ்க்.
எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ ஆகியவை இணைந்து புதிய பாதையில் நடை போடும். இனி இது வெறும் சமூக வலைதளமாக மட்டும் இல்லாமல், மனித குல முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.
மேலும் இந்த விற்பனையின் மூலமாக இரு நிறுவனங்களையும் இணைத்துள்ளார் எலான் மஸ்க். இதில் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் இருக்கும்.
கடந்த 2022ம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்துதான் அவர் எக்ஸ்ஏஐ நிறுவனத்தை அடுத்த ஆண்டு தொடங்கினார். அடுத்தடுத்து பல மாற்றங்களையும் அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகப்படுத்திய க்ரோக் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. சாட் ஜிபிடி, டீப்சீக் ஆகியவற்றுக்கு போட்டியாக இது மாறி வருகிறது. எக்ஸ் தளத்தில் க்ரோக் படும் பாட்டைப் பார்த்தாலே இது தெரியும்.
இதில் என்ன வேடிக்கை என்றால் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுதான் கடந்த 2015ம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தை உருவாக்கினர். இதுதான் சாட் ஜிபிடியை உருவாக்கியது. இப்போது தான் உருவாக்கிய சாட் ஜிபிடிக்குப் போட்டியாக க்ரோக்கை களம் இறக்கி விட்டுள்ளார் எலான் மஸ்க்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}