Elon Musk sells X.. வேற லெவலுக்கு மாறப் போகும் எக்ஸ் தளம்.. எக்ஸ்ஏஐ-யிடம் விற்ற மஸ்க்!

Mar 29, 2025,12:53 PM IST

சான்பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் தனது சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் தளத்தை, தன்னுடைய எக்ஸ்ஏஐ நிறுவனத்திற்கு விற்று விட்டார். 33 பில்லியன் டாலர் மதிப்புக்கு இந்த பரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். மேலும் இரு நிறுவனங்களும் இனி இணைந்து செயல்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எக்ஸ் தளம் இனி செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக மாறும். மிகப் பெரிய வளர்ச்சியையும் அது காணும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 


எக்ஸ் தளம் முன்பி டிவிட்டர் என்று அழைக்கப்பட்டது. அதை எலான் மஸ்க் வாங்கி எக்ஸ் என்று பெயர் மாற்றினார். எக்ஸ் தளத்தில் தற்போது 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். உலகின் முன்னணி சமூக வலைதளமாக இது திகழ்கிறது. இந்த நிலையில்தான் இதை வேறு லெவலில் வளர்க்க வேண்டும் என்பதற்காக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எக்ஸ் ஏஐ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார் எலான் மஸ்க்.




எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ ஆகியவை இணைந்து புதிய பாதையில் நடை போடும். இனி இது வெறும் சமூக வலைதளமாக மட்டும் இல்லாமல், மனித குல முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார் எலான் மஸ்க்.


மேலும் இந்த விற்பனையின் மூலமாக இரு நிறுவனங்களையும் இணைத்துள்ளார் எலான் மஸ்க். இதில் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலராகவும், எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 33 பில்லியன் டாலராகவும் இருக்கும். 


கடந்த 2022ம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்துதான் அவர் எக்ஸ்ஏஐ நிறுவனத்தை அடுத்த ஆண்டு தொடங்கினார்.  அடுத்தடுத்து பல மாற்றங்களையும் அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். சமீபத்தில் எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகப்படுத்திய க்ரோக் பெரிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. சாட் ஜிபிடி, டீப்சீக் ஆகியவற்றுக்கு போட்டியாக இது மாறி வருகிறது. எக்ஸ் தளத்தில் க்ரோக் படும் பாட்டைப் பார்த்தாலே இது தெரியும்.


இதில் என்ன வேடிக்கை என்றால் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுதான் கடந்த 2015ம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தை உருவாக்கினர். இதுதான் சாட் ஜிபிடியை உருவாக்கியது. இப்போது தான் உருவாக்கிய சாட் ஜிபிடிக்குப் போட்டியாக க்ரோக்கை களம் இறக்கி விட்டுள்ளார் எலான் மஸ்க்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆளுநர் உரையில் இடம் பெற்ற அதிரடி அறிவிப்பு

news

ஆளுநர் உரை எப்படி இருந்தது? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்

news

எந்த கொம்பனாலும் அதிமுக.,வை அசைக்க முடியாது : இபிஎஸ் உறுதி

news

அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

உலக யோகா தின விழா: மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

news

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்த தடை

news

இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?

news

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. ஆளுநர் உரையை முழுமையாக படித்தார் ஆளுநர் ஆர்லேகர்!

news

எம்மை குளிர்விக்க வந்தவளே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்