MRTS.. சென்னை வேளச்சேரி டூ பீச் ரயில்கள்.. நாளை முதல் மீண்டும் இயக்கம்.. என்ஜாய் மக்களே!

Oct 28, 2024,08:52 PM IST

சென்னை: சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரையிலான எம்ஆர்டிஎஸ் ரயில் சேவை (மாடி ரயில்) நாளை முதல் மீண்டும் வழக்கம் போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரை இந்த மாடி ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் மாடி ரயில் சேவை வேளச்சேரி முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது நான்காவது வழித்தடப் பணிகள் முடிவுற்றிருப்பதால் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்படவுள்ளன.




நாளை முதல் இந்த ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மாடி ரயில் சேவையால் பலனடைந்து வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறு மார்க்கத்தில் அதேபோல 45 ரயில்களும் என மொத்தம் 90 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடற்கரையிலிருந்து முதல் ரயில் காலை 4.53 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து முதல் ரயில் காலை 4 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மாடி ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு பெரும் அசவுகரியமாக இருந்து வந்தது. அதைத் தாண்டி போக வேண்டியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது மாடி ரயில் மீண்டும் ஓடப் போவதால் மக்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்