சென்னை: சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரையிலான எம்ஆர்டிஎஸ் ரயில் சேவை (மாடி ரயில்) நாளை முதல் மீண்டும் வழக்கம் போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரை இந்த மாடி ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் மாடி ரயில் சேவை வேளச்சேரி முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது நான்காவது வழித்தடப் பணிகள் முடிவுற்றிருப்பதால் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்படவுள்ளன.

நாளை முதல் இந்த ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மாடி ரயில் சேவையால் பலனடைந்து வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறு மார்க்கத்தில் அதேபோல 45 ரயில்களும் என மொத்தம் 90 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடற்கரையிலிருந்து முதல் ரயில் காலை 4.53 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து முதல் ரயில் காலை 4 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாடி ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு பெரும் அசவுகரியமாக இருந்து வந்தது. அதைத் தாண்டி போக வேண்டியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது மாடி ரயில் மீண்டும் ஓடப் போவதால் மக்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}