சென்னை: சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரையிலான எம்ஆர்டிஎஸ் ரயில் சேவை (மாடி ரயில்) நாளை முதல் மீண்டும் வழக்கம் போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை வேளச்சேரி முதல் கடற்கரை வரை இந்த மாடி ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் மாடி ரயில் சேவை வேளச்சேரி முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது நான்காவது வழித்தடப் பணிகள் முடிவுற்றிருப்பதால் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் சேவைகள் வழக்கம் போல இயக்கப்படவுள்ளன.

நாளை முதல் இந்த ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் மாடி ரயில் சேவையால் பலனடைந்து வரும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறு மார்க்கத்தில் அதேபோல 45 ரயில்களும் என மொத்தம் 90 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடற்கரையிலிருந்து முதல் ரயில் காலை 4.53 மணிக்கும், வேளச்சேரியிலிருந்து முதல் ரயில் காலை 4 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாடி ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு பெரும் அசவுகரியமாக இருந்து வந்தது. அதைத் தாண்டி போக வேண்டியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்போது மாடி ரயில் மீண்டும் ஓடப் போவதால் மக்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் முடிவுக்கு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}