தினம் ஒரு கவிதை.. ஏன்?.. எதனால்??.. யாரால்???

Jan 31, 2025,04:55 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


அன்று ... எங்கு நோக்கினும்...
கருத்தடை மையங்கள்..!!!

இன்று ...எங்கு நோக்கினும்... 
கருத்தரிப்பு மையங்கள்..!!!

அன்று..
நாம் இருவர் ..!!! 
நமக்கு ஒருவர்..!!! என்ற
அரசு விளம்பரங்கள் எங்கும் ..!!

இன்று 
நாம் இருவர் ..!! 
நமக்கு எங்கே... ஒருவர்..?? என்ற 
தனியார் விளம்பரங்கள் எங்கும்.!!
 
அன்று...கருத்தடை மையங்களில், 
மக்கள் கூட்டம்...!!!
இன்று...கருத்தரிப்பு மையங்களில் ,
மக்கள் கூட்டம்...!!!

ஏன் ..?? எதனால்..?? யாரால்..??

உணவு பழக்க மாற்றம்..!!
உறங்கும் பழக்க மாற்றம்..!!
உடல் உழைப்பு இன்மை..!!




உலகம்  வெப்பமயமாதல்..!!
உணவில் இரசாயனக் கலவை.!!
உள்ளத்தின்  சோர்வு..!!

உன் வாழ்க்கை முறை..!!
உன் தாமதமான திருமணம்.!!! 
உடல் எடை அதிகரிப்பு..!!

இந்த மென்பொருள் யுகத்தில்,
இரவென்றும் பாராமல் ...

பணம் ஒன்றே குறிக்கோளாய்...
புரியாத இலக்கு  நோக்கி ..!!

ஏன்  என்றே தெரியாமல்..!!
எதற்கு என்றே புரியாமல்..!!

ஓடி ஓடி உழைத்தாயிற்று..!!
ஓய்ந்த போது மிஞ்சுவது ..!!



நம்  நற் சந்ததிகள் மட்டுமே..!!!
மழலைச் செல்வமே , மட்டற்ற செல்வம்..!!!
மழலையின்  மலர் சிரிப்பில் ..!!
மயங்காதோர் உண்டோ.??

(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்