தினம் ஒரு கவிதை.. ஏன்?.. எதனால்??.. யாரால்???

Jan 31, 2025,04:55 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


அன்று ... எங்கு நோக்கினும்...
கருத்தடை மையங்கள்..!!!

இன்று ...எங்கு நோக்கினும்... 
கருத்தரிப்பு மையங்கள்..!!!

அன்று..
நாம் இருவர் ..!!! 
நமக்கு ஒருவர்..!!! என்ற
அரசு விளம்பரங்கள் எங்கும் ..!!

இன்று 
நாம் இருவர் ..!! 
நமக்கு எங்கே... ஒருவர்..?? என்ற 
தனியார் விளம்பரங்கள் எங்கும்.!!
 
அன்று...கருத்தடை மையங்களில், 
மக்கள் கூட்டம்...!!!
இன்று...கருத்தரிப்பு மையங்களில் ,
மக்கள் கூட்டம்...!!!

ஏன் ..?? எதனால்..?? யாரால்..??

உணவு பழக்க மாற்றம்..!!
உறங்கும் பழக்க மாற்றம்..!!
உடல் உழைப்பு இன்மை..!!




உலகம்  வெப்பமயமாதல்..!!
உணவில் இரசாயனக் கலவை.!!
உள்ளத்தின்  சோர்வு..!!

உன் வாழ்க்கை முறை..!!
உன் தாமதமான திருமணம்.!!! 
உடல் எடை அதிகரிப்பு..!!

இந்த மென்பொருள் யுகத்தில்,
இரவென்றும் பாராமல் ...

பணம் ஒன்றே குறிக்கோளாய்...
புரியாத இலக்கு  நோக்கி ..!!

ஏன்  என்றே தெரியாமல்..!!
எதற்கு என்றே புரியாமல்..!!

ஓடி ஓடி உழைத்தாயிற்று..!!
ஓய்ந்த போது மிஞ்சுவது ..!!



நம்  நற் சந்ததிகள் மட்டுமே..!!!
மழலைச் செல்வமே , மட்டற்ற செல்வம்..!!!
மழலையின்  மலர் சிரிப்பில் ..!!
மயங்காதோர் உண்டோ.??

(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

news

கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!

news

2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

news

விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!

news

செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்

news

உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

news

108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்