தினம் ஒரு கவிதை.. ஏன்?.. எதனால்??.. யாரால்???

Jan 31, 2025,04:55 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


அன்று ... எங்கு நோக்கினும்...
கருத்தடை மையங்கள்..!!!

இன்று ...எங்கு நோக்கினும்... 
கருத்தரிப்பு மையங்கள்..!!!

அன்று..
நாம் இருவர் ..!!! 
நமக்கு ஒருவர்..!!! என்ற
அரசு விளம்பரங்கள் எங்கும் ..!!

இன்று 
நாம் இருவர் ..!! 
நமக்கு எங்கே... ஒருவர்..?? என்ற 
தனியார் விளம்பரங்கள் எங்கும்.!!
 
அன்று...கருத்தடை மையங்களில், 
மக்கள் கூட்டம்...!!!
இன்று...கருத்தரிப்பு மையங்களில் ,
மக்கள் கூட்டம்...!!!

ஏன் ..?? எதனால்..?? யாரால்..??

உணவு பழக்க மாற்றம்..!!
உறங்கும் பழக்க மாற்றம்..!!
உடல் உழைப்பு இன்மை..!!




உலகம்  வெப்பமயமாதல்..!!
உணவில் இரசாயனக் கலவை.!!
உள்ளத்தின்  சோர்வு..!!

உன் வாழ்க்கை முறை..!!
உன் தாமதமான திருமணம்.!!! 
உடல் எடை அதிகரிப்பு..!!

இந்த மென்பொருள் யுகத்தில்,
இரவென்றும் பாராமல் ...

பணம் ஒன்றே குறிக்கோளாய்...
புரியாத இலக்கு  நோக்கி ..!!

ஏன்  என்றே தெரியாமல்..!!
எதற்கு என்றே புரியாமல்..!!

ஓடி ஓடி உழைத்தாயிற்று..!!
ஓய்ந்த போது மிஞ்சுவது ..!!



நம்  நற் சந்ததிகள் மட்டுமே..!!!
மழலைச் செல்வமே , மட்டற்ற செல்வம்..!!!
மழலையின்  மலர் சிரிப்பில் ..!!
மயங்காதோர் உண்டோ.??

(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

வெந்தயக் களி

news

கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!

news

உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

news

4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்