தினம் ஒரு கவிதை.. ஏன்?.. எதனால்??.. யாரால்???

Jan 31, 2025,04:55 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


அன்று ... எங்கு நோக்கினும்...
கருத்தடை மையங்கள்..!!!

இன்று ...எங்கு நோக்கினும்... 
கருத்தரிப்பு மையங்கள்..!!!

அன்று..
நாம் இருவர் ..!!! 
நமக்கு ஒருவர்..!!! என்ற
அரசு விளம்பரங்கள் எங்கும் ..!!

இன்று 
நாம் இருவர் ..!! 
நமக்கு எங்கே... ஒருவர்..?? என்ற 
தனியார் விளம்பரங்கள் எங்கும்.!!
 
அன்று...கருத்தடை மையங்களில், 
மக்கள் கூட்டம்...!!!
இன்று...கருத்தரிப்பு மையங்களில் ,
மக்கள் கூட்டம்...!!!

ஏன் ..?? எதனால்..?? யாரால்..??

உணவு பழக்க மாற்றம்..!!
உறங்கும் பழக்க மாற்றம்..!!
உடல் உழைப்பு இன்மை..!!




உலகம்  வெப்பமயமாதல்..!!
உணவில் இரசாயனக் கலவை.!!
உள்ளத்தின்  சோர்வு..!!

உன் வாழ்க்கை முறை..!!
உன் தாமதமான திருமணம்.!!! 
உடல் எடை அதிகரிப்பு..!!

இந்த மென்பொருள் யுகத்தில்,
இரவென்றும் பாராமல் ...

பணம் ஒன்றே குறிக்கோளாய்...
புரியாத இலக்கு  நோக்கி ..!!

ஏன்  என்றே தெரியாமல்..!!
எதற்கு என்றே புரியாமல்..!!

ஓடி ஓடி உழைத்தாயிற்று..!!
ஓய்ந்த போது மிஞ்சுவது ..!!



நம்  நற் சந்ததிகள் மட்டுமே..!!!
மழலைச் செல்வமே , மட்டற்ற செல்வம்..!!!
மழலையின்  மலர் சிரிப்பில் ..!!
மயங்காதோர் உண்டோ.??

(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்