திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ரூ. 20 லட்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார். அவரது காரிலிருந்து இந்தப் பணத்தை போலீஸார் கைப்பற்றினர்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிக அளவிலான அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்து வருகின்றன. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பல்வேறு துறையினரின் வீடுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், நகைக் கடைகள் என தொடர்ந்து ரெய்டுகள் நடைபெறுகின்றன.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இதில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் அங்கித் திவாரி என்பவரின் காரில் ரூ. 20 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் அங்கித் திவாரி என்றும் அமலாக்கத்துறை அதிகாரி என்றும் தெரிய வந்தது.

அவரிடம் இருந்த பணமானது திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கொடுத்த லஞ்சப் பணம் என்றும் தெரிய வந்தது. அந்த டாக்டர் மீதான வழக்கிலிருந்து அவரை விடுவிக்க இந்த லஞ்சத்தை அங்கித் திவாரி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திவாரியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}