திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக ரூ. 20 லட்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார். அவரது காரிலிருந்து இந்தப் பணத்தை போலீஸார் கைப்பற்றினர்.
தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிக அளவிலான அமலாக்கத்துறை ரெய்டுகள் நடந்து வருகின்றன. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பல்வேறு துறையினரின் வீடுகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், நகைக் கடைகள் என தொடர்ந்து ரெய்டுகள் நடைபெறுகின்றன.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இதில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் அங்கித் திவாரி என்பவரின் காரில் ரூ. 20 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் அங்கித் திவாரி என்றும் அமலாக்கத்துறை அதிகாரி என்றும் தெரிய வந்தது.

அவரிடம் இருந்த பணமானது திண்டுக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கொடுத்த லஞ்சப் பணம் என்றும் தெரிய வந்தது. அந்த டாக்டர் மீதான வழக்கிலிருந்து அவரை விடுவிக்க இந்த லஞ்சத்தை அங்கித் திவாரி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திவாரியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}