தினம் ஒரு கவிதை... எங்கே போனாயோ ?

Jan 28, 2025,10:23 AM IST

- கவிஞாயிறு இரா.  கலைச்செல்வி 


அன்று,

வயலில் உழைத்து களைத்து ..!!

வந்து அமர்ந்த உழவனுக்கு ..!!


படர்ந்த புங்கமரத்தடியின் கீழ்..!! 

பட்டப்பகல் உச்சி வெயிலில்..!!


கண்முன்னே கஞ்சிக் கலயம்..!!

கப கப பசியில் அதுவே தேவாமிர்தம்..!!


கடித்துக் கொள்ள  சிறுவெங்காயம் ..!!

ருசித்துக் கொள்ள மோர் மிளகாய் ..!!


உடல் உறுதியாய் இருந்தது. 

உடம்பினை நோயின்றி காத்தது.




இன்று,

அரை நூற்றாண்டுக்குப் பிறகு,

ஆஸ்பத்திரியில் நீ நுழைந்துள்ளாய். 


அழகிய ஐந்து நட்சத்திர ஹோட்டலின்,

அன்றாட  உணவு பட்டியலில் ,


முதலில் அமர்ந்துள்ள நீ..!!

மூத்த தமிழ்குடியின்  குடும்பங்களின்,


உணவு  பட்டியலில் இருந்து..

உயரே பறந்து எங்கே  போனாயோ..!!


வந்துவிடு .வந்துவிடு..!!

வாழ்வை வளமாக்க எங்களிடம் வந்துவிடு..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்