- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
அன்று,
வயலில் உழைத்து களைத்து ..!!
வந்து அமர்ந்த உழவனுக்கு ..!!
படர்ந்த புங்கமரத்தடியின் கீழ்..!!
பட்டப்பகல் உச்சி வெயிலில்..!!
கண்முன்னே கஞ்சிக் கலயம்..!!
கப கப பசியில் அதுவே தேவாமிர்தம்..!!
கடித்துக் கொள்ள சிறுவெங்காயம் ..!!
ருசித்துக் கொள்ள மோர் மிளகாய் ..!!
உடல் உறுதியாய் இருந்தது.
உடம்பினை நோயின்றி காத்தது.

இன்று,
அரை நூற்றாண்டுக்குப் பிறகு,
ஆஸ்பத்திரியில் நீ நுழைந்துள்ளாய்.
அழகிய ஐந்து நட்சத்திர ஹோட்டலின்,
அன்றாட உணவு பட்டியலில் ,
முதலில் அமர்ந்துள்ள நீ..!!
மூத்த தமிழ்குடியின் குடும்பங்களின்,
உணவு பட்டியலில் இருந்து..
உயரே பறந்து எங்கே போனாயோ..!!
வந்துவிடு .வந்துவிடு..!!
வாழ்வை வளமாக்க எங்களிடம் வந்துவிடு..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}