தினம் ஒரு கவிதை... எங்கே போனாயோ ?

Jan 28, 2025,10:23 AM IST

- கவிஞாயிறு இரா.  கலைச்செல்வி 


அன்று,

வயலில் உழைத்து களைத்து ..!!

வந்து அமர்ந்த உழவனுக்கு ..!!


படர்ந்த புங்கமரத்தடியின் கீழ்..!! 

பட்டப்பகல் உச்சி வெயிலில்..!!


கண்முன்னே கஞ்சிக் கலயம்..!!

கப கப பசியில் அதுவே தேவாமிர்தம்..!!


கடித்துக் கொள்ள  சிறுவெங்காயம் ..!!

ருசித்துக் கொள்ள மோர் மிளகாய் ..!!


உடல் உறுதியாய் இருந்தது. 

உடம்பினை நோயின்றி காத்தது.




இன்று,

அரை நூற்றாண்டுக்குப் பிறகு,

ஆஸ்பத்திரியில் நீ நுழைந்துள்ளாய். 


அழகிய ஐந்து நட்சத்திர ஹோட்டலின்,

அன்றாட  உணவு பட்டியலில் ,


முதலில் அமர்ந்துள்ள நீ..!!

மூத்த தமிழ்குடியின்  குடும்பங்களின்,


உணவு  பட்டியலில் இருந்து..

உயரே பறந்து எங்கே  போனாயோ..!!


வந்துவிடு .வந்துவிடு..!!

வாழ்வை வளமாக்க எங்களிடம் வந்துவிடு..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Kamarajar Poem: கல்விக்கண் தந்த தெய்வம்

news

ஆண்களுக்குள்ளே தான் பெண்கள்!

news

Kamarajar birth day: கையளவு நெஞ்சுக்குள்ள.. கடலளவு எண்ணம் வைத்த.. காமராசர்!

news

பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்

news

"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி

news

"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!

news

"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

news

யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

அதிகம் பார்க்கும் செய்திகள்