- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
உன் உயிர் கொடுத்து..!!
என் உயிர் தந்தவளே..!!
உன் உதிரத்தை..!!
உணவாக்கி தந்தவளே..!!
உலகின் மிக சுகமான வீடு ..!!
உன் கருவறை மட்டுமே..!!!
உலகின் மிகப் பெரிய சக்தி..!!
உன் அன்பு மட்டுமே..!!!
உலகின் எந்த பரிசும்..!!
உன் ஆசை முத்தத்திற்கு ஈடாகுமோ..?

நான் மறக்கவே முடியாத ,
நான் பார்த்த முதல் ஓவியம் நீ..!!!
நான் கேட்ட முதல் இசை உன் குரல்..!!
என் நலம் விரும்பும் ,
என் ஒரே ஜீவன் நீயே..!!
எனைக் காத்த கடவுளும் நீயே..!!
நீ உடுத்திய பருத்தி சேலையில்...!!
நீ எனக்கு கட்டிய தொட்டிலுக்கு..!!
நிகரான மாளிகை உண்டோ...?
உன் பருத்தி சேலை விரிப்பு மட்டுமே..!!
என் சுகமான பஞ்சு மெத்தை..!!
என் எல்லா கவலைகளும் ,
என்றும் பறந்து போகும்..!!
உன் சேலையை முகர்ந்து ,
உணர்ந்த அந்த நொடியில்..!!
நீ இவ்வுலகில் இல்லாத போது ,
என் ஒரே ஆறுதல்...!!!
நீ விட்டுச் சென்ற "அந்த"
உன் சேலை மட்டுமே...!!!
உன் வாசம்..!! உன் உயிர்..!!
உன் அந்த சேலைக்குள்ளே...!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
{{comments.comment}}