தினம் ஒரு கவிதை.. என்னுயிர் அம்மா

Jan 30, 2025,03:11 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


உன் உயிர் கொடுத்து..!!

என் உயிர் தந்தவளே..!!


உன்  உதிரத்தை..!!

உணவாக்கி தந்தவளே..!!


உலகின் மிக சுகமான வீடு ..!!

உன் கருவறை மட்டுமே..!!!


உலகின் மிகப் பெரிய சக்தி..!!

உன் அன்பு மட்டுமே..!!!


உலகின் எந்த பரிசும்..!!

உன் ஆசை முத்தத்திற்கு ஈடாகுமோ..?




நான் மறக்கவே முடியாத ,

நான் பார்த்த முதல் ஓவியம் நீ..!!!

நான் கேட்ட முதல் இசை உன் குரல்..!!


என் நலம் விரும்பும் ,

என் ஒரே  ஜீவன்  நீயே..!!

எனைக் காத்த கடவுளும் நீயே..!!


நீ உடுத்திய  பருத்தி சேலையில்...!!

நீ எனக்கு கட்டிய தொட்டிலுக்கு..!!

நிகரான மாளிகை உண்டோ...?


உன் பருத்தி சேலை விரிப்பு மட்டுமே..!!

என் சுகமான பஞ்சு  மெத்தை..!!


என் எல்லா கவலைகளும் ,

என்றும் பறந்து போகும்..!!


உன் சேலையை முகர்ந்து ,

உணர்ந்த அந்த நொடியில்..!!


நீ இவ்வுலகில் இல்லாத போது ,

என் ஒரே ஆறுதல்...!!!


நீ    விட்டுச் சென்ற  "அந்த"

உன்  சேலை மட்டுமே...!!!


உன் வாசம்..!! உன் உயிர்..!!

உன்  அந்த சேலைக்குள்ளே...!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்