- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
உன் உயிர் கொடுத்து..!!
என் உயிர் தந்தவளே..!!
உன் உதிரத்தை..!!
உணவாக்கி தந்தவளே..!!
உலகின் மிக சுகமான வீடு ..!!
உன் கருவறை மட்டுமே..!!!
உலகின் மிகப் பெரிய சக்தி..!!
உன் அன்பு மட்டுமே..!!!
உலகின் எந்த பரிசும்..!!
உன் ஆசை முத்தத்திற்கு ஈடாகுமோ..?
நான் மறக்கவே முடியாத ,
நான் பார்த்த முதல் ஓவியம் நீ..!!!
நான் கேட்ட முதல் இசை உன் குரல்..!!
என் நலம் விரும்பும் ,
என் ஒரே ஜீவன் நீயே..!!
எனைக் காத்த கடவுளும் நீயே..!!
நீ உடுத்திய பருத்தி சேலையில்...!!
நீ எனக்கு கட்டிய தொட்டிலுக்கு..!!
நிகரான மாளிகை உண்டோ...?
உன் பருத்தி சேலை விரிப்பு மட்டுமே..!!
என் சுகமான பஞ்சு மெத்தை..!!
என் எல்லா கவலைகளும் ,
என்றும் பறந்து போகும்..!!
உன் சேலையை முகர்ந்து ,
உணர்ந்த அந்த நொடியில்..!!
நீ இவ்வுலகில் இல்லாத போது ,
என் ஒரே ஆறுதல்...!!!
நீ விட்டுச் சென்ற "அந்த"
உன் சேலை மட்டுமே...!!!
உன் வாசம்..!! உன் உயிர்..!!
உன் அந்த சேலைக்குள்ளே...!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
மீன் குழம்பு வச்சு.. அதுல கொஞ்சம் விஷம் கலந்து.. கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!
Valentine's day: காதலில் உயிர்த்து இருப்பவன் நான்.. நிறைந்து நிற்பவள் நீ.. இணைந்து நிற்பது நாம்!
{{comments.comment}}