தினம் ஒரு கவிதை.. என்னுயிர் அம்மா

Jan 30, 2025,03:11 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி 


உன் உயிர் கொடுத்து..!!

என் உயிர் தந்தவளே..!!


உன்  உதிரத்தை..!!

உணவாக்கி தந்தவளே..!!


உலகின் மிக சுகமான வீடு ..!!

உன் கருவறை மட்டுமே..!!!


உலகின் மிகப் பெரிய சக்தி..!!

உன் அன்பு மட்டுமே..!!!


உலகின் எந்த பரிசும்..!!

உன் ஆசை முத்தத்திற்கு ஈடாகுமோ..?




நான் மறக்கவே முடியாத ,

நான் பார்த்த முதல் ஓவியம் நீ..!!!

நான் கேட்ட முதல் இசை உன் குரல்..!!


என் நலம் விரும்பும் ,

என் ஒரே  ஜீவன்  நீயே..!!

எனைக் காத்த கடவுளும் நீயே..!!


நீ உடுத்திய  பருத்தி சேலையில்...!!

நீ எனக்கு கட்டிய தொட்டிலுக்கு..!!

நிகரான மாளிகை உண்டோ...?


உன் பருத்தி சேலை விரிப்பு மட்டுமே..!!

என் சுகமான பஞ்சு  மெத்தை..!!


என் எல்லா கவலைகளும் ,

என்றும் பறந்து போகும்..!!


உன் சேலையை முகர்ந்து ,

உணர்ந்த அந்த நொடியில்..!!


நீ இவ்வுலகில் இல்லாத போது ,

என் ஒரே ஆறுதல்...!!!


நீ    விட்டுச் சென்ற  "அந்த"

உன்  சேலை மட்டுமே...!!!


உன் வாசம்..!! உன் உயிர்..!!

உன்  அந்த சேலைக்குள்ளே...!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்