அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...விவசாயிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Jul 07, 2025,11:12 AM IST

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடுப்பாடி பழனிச்சாமி இன்று தனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவங்கினார். 


கோவை சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட தேக்கம்பட்டியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, அங்கிருந்து தனது பிரச்சார பயணத்தை அவர் துவங்கினார். தனக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பச்சை நிற வாகனத்தில், இசட் பிளஸ் பாதுகாப்புடன், "மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் அவர் பிரச்சார பயணத்தை துவங்கினார்.




தேக்கம்பட்டியில் தனியார் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் உடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார். அப்போது அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்கள் அனைவரின் மனம் குளிரும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். 


இதனால் கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் விவகாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல் தனது சுற்றுப் பயணத்தில் வேறு என்னென்ன வாக்குதிகள் அதிமுக தரப்பில் இருந்து வழங்கப்பட உள்ளது என்பதை தெரிந்து கொள்ள மக்களும், அரசியல் கட்சிகளும் ஆர்வமாக உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்