ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இதில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி அங்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அங்கு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. பாஜகவும் தேர்தலை புறக்கணித்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனால் அங்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி மட்டுமே முக்கியக் கட்சிகளாக களம் காண்கின்றனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மொத்தம் 65 வேட்பாளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இன்று மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளைக்குள் மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து நாளை மாலை, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
பிப்ரவரி மாதம் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}