ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தபோது, மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்து. பின்னர் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18- ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட மொத்தம் 48 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதே சமயத்தில் முன்னணி கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாஜக தவெக, உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலை புறக்கணித்துள்ளன .
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடந்துள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ஒரு பக்கம் திமுகவினரும், மறுபக்கம் நாம் தமிழர் கட்சியினரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் இறங்கினர். இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தொகுதியில் தங்கியுள்ள பிற ஊர்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி சட்டசபைத் தேர்தல்
இதேபோல டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரமும் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கும் பிப்ரவரி 5ம் தேதிதான் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
டெல்லியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 3வது கட்சியாக காங்கிரஸும் களத்தில் உள்ளது. டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக தரப்பில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}