ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தபோது, மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்து. பின்னர் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18- ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட மொத்தம் 48 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதே சமயத்தில் முன்னணி கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாஜக தவெக, உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தலை புறக்கணித்துள்ளன .
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடந்துள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ஒரு பக்கம் திமுகவினரும், மறுபக்கம் நாம் தமிழர் கட்சியினரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் இறங்கினர். இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தொகுதியில் தங்கியுள்ள பிற ஊர்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி சட்டசபைத் தேர்தல்
இதேபோல டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரமும் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கும் பிப்ரவரி 5ம் தேதிதான் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
டெல்லியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 3வது கட்சியாக காங்கிரஸும் களத்தில் உள்ளது. டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக தரப்பில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}