ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. இடைத் தேர்தல் எப்போது நடைபெறும்?

Dec 17, 2024,05:45 PM IST

சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். அதன் பின்னர் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திருமகன் ஈவெராவின் தந்தை ஆவார்.




ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக வலம் வந்த நிலையில்,  சில மாதங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அதன்பின்னர் உடல்நிலை தேறிய நிலையில் வீடு திரும்பினார். இதையடுத்து கடந்த நவம்பர் 27ம் தேதி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பயன் தராத நிலையில், கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.


இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டபேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.


சட்டப்பேரவை காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் படி, ஈரோடு தொகுதியில் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி  சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்