ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. இடைத் தேர்தல் எப்போது நடைபெறும்?

Dec 17, 2024,05:45 PM IST

சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். அதன் பின்னர் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திருமகன் ஈவெராவின் தந்தை ஆவார்.




ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக வலம் வந்த நிலையில்,  சில மாதங்களுக்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அதன்பின்னர் உடல்நிலை தேறிய நிலையில் வீடு திரும்பினார். இதையடுத்து கடந்த நவம்பர் 27ம் தேதி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பயன் தராத நிலையில், கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.


இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டபேரவை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.


சட்டப்பேரவை காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியின் படி, ஈரோடு தொகுதியில் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லி  சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

மலைகளின் மாநாட்டை தொடர்ந்து... கடல் மாநாடு நடத்த கடலுக்குள் சென்று ஆய்வு செய்த சீமான்!

news

விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

news

வரும் வாரங்களில் விஜய் பிரச்சாரங்களை தவிர்த்து... பொதுக் கூட்டங்களை நடத்தி கொள்ள வேண்டும்: சீமான்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்