சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 2021ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். ஆனால் திருமகன் ஈவேரா திடீர் மரணமடையவே, கடந்த 2023ம் ஆண்டு அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அங்கு மீண்டும் இடைத் தேர்தல் வந்துள்ளது. இடைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: ஜனவரி 10
மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்: ஜனவரி 17
மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 18
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜனவரி 20
தேர்தல் நாள் : பிப்ரவரி 5
வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}