சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 2021ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். ஆனால் திருமகன் ஈவேரா திடீர் மரணமடையவே, கடந்த 2023ம் ஆண்டு அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அங்கு மீண்டும் இடைத் தேர்தல் வந்துள்ளது. இடைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: ஜனவரி 10
மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்: ஜனவரி 17
மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 18
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜனவரி 20
தேர்தல் நாள் : பிப்ரவரி 5
வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடியா இருக்கே...மலேசியாவில் அரசியல் பேச விஜய்க்கு தடை!
புத்தகப் பிரியர்களின் கவனத்திற்கு.. 49-வது சென்னை புத்தகத் திருவிழா தேதி மாற்றம்!
சார்பு ஆய்வாளர் தேர்வில்... தமிழ் கேள்விகளை நீக்கியுள்ள திமுக அரசிற்கு கண்டனம்: அண்ணாமலை
மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... விஜய் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம்...பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
{{comments.comment}}