சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 2021ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். ஆனால் திருமகன் ஈவேரா திடீர் மரணமடையவே, கடந்த 2023ம் ஆண்டு அங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் அங்கு மீண்டும் இடைத் தேர்தல் வந்துள்ளது. இடைத் தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. டெல்லி சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: ஜனவரி 10
மனுத் தாக்கலுக்கு கடைசி நாள்: ஜனவரி 17
மனுக்கள் பரிசீலனை: ஜனவரி 18
மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: ஜனவரி 20
தேர்தல் நாள் : பிப்ரவரி 5
வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?
{{comments.comment}}