பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!

Jan 10, 2026,11:48 AM IST

பா. பானுமதி


அறிந்து சில பிழைகள்

அறியாமல் சில பிழைகள்

தெரிந்து பல பிழைகள்

தெரியாமல் சில பிழைகள் 

புரிந்து சில பிழைகள் 

புரியாமல் சில பிழைகள் 

தெளிந்து சில பிழைகள் 

தேர்ந்து சில பிழைகள் 

வலிந்து சில பிழைகள் 

வளைந்து சில பிழைகள்

விரும்பி சில பிழைகள்

விரும்பாமல் சில பிழைகள் 

பிழைகளுடன் மனித வாழ்வு 




பின்னிப் பிணைந்து 

குழைந்து நுழைந்து 

பிழைகளால் இழைந்து

பிழைகளை விழைந்து 

பிழைகளில் அழைத்து 

பிழையாகிக் கொண்டே போகிறது 

பிழைப்புக்காக பிசிராமல் 

சுயநலத்தால் சுற்றி சுற்றி 

மனசாட்சி என்பது மரத்துப்போனது 

மனிதம் மெல்ல மெல்ல கருத்து போகிறது

பிழைகளில் பின்னிப்பிணைந்த மனிதத்தை 

சிக்கலாய் சிதைந்ததை சீர்தூக்க நல் சிந்தை தேவை 

கல்வி என்பது கந்தலுக்கானது; கயமைக்கு வேரானது

கடவுளே தன்னைப்போல பிறரை எண்ணும் 

கருணை மழை பொழிவாய் அப்போதே

மனிதம் மண்ணில் மலரும் மகிழ்ச்சி எங்கும் பரவும் 

பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்