என்னைய எப்படிப் பாத்துக்கிறாங்க.. எல்லாம் எங்கம்மாவாலதான்.. நெகிழும் ஜான்வி கபூர்

May 24, 2024,02:43 PM IST

மும்பை: எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள பாசமும், அன்பும், மரியாதையும் என்று நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.


சினிமா வரலாற்றில் தனக்கென்று தனியிடம் உருவாக்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து பின்னர் படிப்படியாக தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து அப்படியே இந்திக்குப் போனவர் ஸ்ரீதேவி. இந்தியில் அவர் நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இந்தியா முழுவதையும் வசீகரித்தவர்.




இவரது மகள் தான் ஜான்வி கபூர். தற்போது இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவர் 2018ல் தடாக் படத்தின் மூலம் சினிமா உலகில் கால் எடுத்து வைத்தவர். இந்தியில் நடித்துள்ள இவர் தேவரா என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்கிறார். இதனை தொடர்ந்து தமிழில் சிம்புவுடன்  நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 


இந்நிலையில், மும்பையில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர் பேசுகையில், " என்னை பார்க்கும் எல்லோரும் உன் அம்மா ஸ்ரீதேவி மாதிரி அழகாக இருக்கிறாய். அவரது சாயலுடன் பிறந்து இருக்கிறாய் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் நியூ ஜெனரேஷன் ஸ்ரீதேவி என்று சொல்லுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும் போது  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 


தெலுங்கில் தேவரா படப்பிடிப்பில் எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள்.  அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள கவுரவம் தான். எனது அம்மா நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருந்தவர். அவரது மகள் என்பதால் என்மீது எல்லோரும் காட்டும் பாசம் என்னை மெய்மறக்க செய்கிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்