என்னைய எப்படிப் பாத்துக்கிறாங்க.. எல்லாம் எங்கம்மாவாலதான்.. நெகிழும் ஜான்வி கபூர்

May 24, 2024,02:43 PM IST

மும்பை: எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள பாசமும், அன்பும், மரியாதையும் என்று நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.


சினிமா வரலாற்றில் தனக்கென்று தனியிடம் உருவாக்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து பின்னர் படிப்படியாக தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து அப்படியே இந்திக்குப் போனவர் ஸ்ரீதேவி. இந்தியில் அவர் நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இந்தியா முழுவதையும் வசீகரித்தவர்.




இவரது மகள் தான் ஜான்வி கபூர். தற்போது இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவர் 2018ல் தடாக் படத்தின் மூலம் சினிமா உலகில் கால் எடுத்து வைத்தவர். இந்தியில் நடித்துள்ள இவர் தேவரா என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்கிறார். இதனை தொடர்ந்து தமிழில் சிம்புவுடன்  நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 


இந்நிலையில், மும்பையில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர் பேசுகையில், " என்னை பார்க்கும் எல்லோரும் உன் அம்மா ஸ்ரீதேவி மாதிரி அழகாக இருக்கிறாய். அவரது சாயலுடன் பிறந்து இருக்கிறாய் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் நியூ ஜெனரேஷன் ஸ்ரீதேவி என்று சொல்லுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும் போது  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 


தெலுங்கில் தேவரா படப்பிடிப்பில் எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள்.  அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள கவுரவம் தான். எனது அம்மா நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருந்தவர். அவரது மகள் என்பதால் என்மீது எல்லோரும் காட்டும் பாசம் என்னை மெய்மறக்க செய்கிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்