மும்பை: எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள பாசமும், அன்பும், மரியாதையும் என்று நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
சினிமா வரலாற்றில் தனக்கென்று தனியிடம் உருவாக்கியவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து பின்னர் படிப்படியாக தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து அப்படியே இந்திக்குப் போனவர் ஸ்ரீதேவி. இந்தியில் அவர் நடிக்க ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இந்தியா முழுவதையும் வசீகரித்தவர்.

இவரது மகள் தான் ஜான்வி கபூர். தற்போது இவரும் படங்களில் நடித்து வருகிறார். இவர் 2018ல் தடாக் படத்தின் மூலம் சினிமா உலகில் கால் எடுத்து வைத்தவர். இந்தியில் நடித்துள்ள இவர் தேவரா என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்கிறார். இதனை தொடர்ந்து தமிழில் சிம்புவுடன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர் பேசுகையில், " என்னை பார்க்கும் எல்லோரும் உன் அம்மா ஸ்ரீதேவி மாதிரி அழகாக இருக்கிறாய். அவரது சாயலுடன் பிறந்து இருக்கிறாய் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் நியூ ஜெனரேஷன் ஸ்ரீதேவி என்று சொல்லுகிறார்கள். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
தெலுங்கில் தேவரா படப்பிடிப்பில் எல்லோரும் என்னை ஒரு மகள் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் என் அம்மா மீது அவர்கள் வைத்துள்ள கவுரவம் தான். எனது அம்மா நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருந்தவர். அவரது மகள் என்பதால் என்மீது எல்லோரும் காட்டும் பாசம் என்னை மெய்மறக்க செய்கிறது என்று கூறியுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}