சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன், இலங்கை திரும்ப தயாராகி வந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிக்கிய ராபர்ட் பையஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் இந்த 7 பேருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழக்கப்பட்டது. இவர்கள் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் இலங்கை தமிழ் ஆதரவு அமைப்புகளின் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த சாந்தன் என்பவர் இன்று காலை 7.50 மணியளவில் உயிரிழந்தார்.
இலங்கையை சேர்ந்த சாந்தன் சொந்த நாடு திரும்ப முடியாமல் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார் விடுதலைக்குப் பிறகு, சொந்த நாட்டிற்கு செல்ல நினைத்த சாந்தன் மத்திய அரசிற்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு இலங்கை செல்ல அனுமதி அளித்திருந்த நிலையில், திடீர் என கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 1 மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}