Fact Check: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வரும் தகவல் உண்மையா?

Nov 20, 2024,06:32 PM IST

டெல்லி: மத்திய அரசு தனது ஊழியர்களின் வயதை 62 ஆக உயர்த்தியிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது.


உண்மை போலவே இப்போது பொய்ச் செய்திகளும் வேகமாக பரவி வருகின்றன. நம்பக் கூடிய வகையில் அவை வருவதால் பெரும்பாலான மக்கள் அதை நம்பி விடுகிறார்கள். அப்படி ஒரு செய்திதான்  மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியானது.


சமூக வலைதளங்களில்இதுதொடர்பாக ஒரு அரசாணை உத்தரவு வலம் வந்து கொண்டுள்ளது. பலரும் இதை வேகமாக பரப்பி வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு குரூப்களில் இது பரப்பப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல் தவறானது என்று தெரிய வந்துள்ளது. 

மத்திய அரசு அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை, உத்தரவும் போடப்படவில்லை.  இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:




மத்திய அரசு தனது ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கவில்லை. உண்மையில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் பரிசீலனையிலேயே இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் தவறானது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசுத் தரப்பிலும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தி அறிக்கையும் தரப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டதாக வந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்