டெல்லி: மத்திய அரசு தனது ஊழியர்களின் வயதை 62 ஆக உயர்த்தியிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது.
உண்மை போலவே இப்போது பொய்ச் செய்திகளும் வேகமாக பரவி வருகின்றன. நம்பக் கூடிய வகையில் அவை வருவதால் பெரும்பாலான மக்கள் அதை நம்பி விடுகிறார்கள். அப்படி ஒரு செய்திதான் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியானது.
சமூக வலைதளங்களில்இதுதொடர்பாக ஒரு அரசாணை உத்தரவு வலம் வந்து கொண்டுள்ளது. பலரும் இதை வேகமாக பரப்பி வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு குரூப்களில் இது பரப்பப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல் தவறானது என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை, உத்தரவும் போடப்படவில்லை. இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு தனது ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கவில்லை. உண்மையில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் பரிசீலனையிலேயே இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் தவறானது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுத் தரப்பிலும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தி அறிக்கையும் தரப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டதாக வந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!
விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்
தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!
Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)
World Bicyle day: சிக்கு.. சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!
Kalaiyarasi Muthuvel Poem: அழகு
அறியாமை பூட்டிட வகுப்பறை திறப்போம்!
Tamil Short Story: அனுசரிப்பு
{{comments.comment}}