Fact Check: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வரும் தகவல் உண்மையா?

Nov 20, 2024,06:32 PM IST

டெல்லி: மத்திய அரசு தனது ஊழியர்களின் வயதை 62 ஆக உயர்த்தியிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது.


உண்மை போலவே இப்போது பொய்ச் செய்திகளும் வேகமாக பரவி வருகின்றன. நம்பக் கூடிய வகையில் அவை வருவதால் பெரும்பாலான மக்கள் அதை நம்பி விடுகிறார்கள். அப்படி ஒரு செய்திதான்  மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியானது.


சமூக வலைதளங்களில்இதுதொடர்பாக ஒரு அரசாணை உத்தரவு வலம் வந்து கொண்டுள்ளது. பலரும் இதை வேகமாக பரப்பி வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு குரூப்களில் இது பரப்பப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல் தவறானது என்று தெரிய வந்துள்ளது. 

மத்திய அரசு அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை, உத்தரவும் போடப்படவில்லை.  இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:




மத்திய அரசு தனது ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கவில்லை. உண்மையில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் பரிசீலனையிலேயே இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் தவறானது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசுத் தரப்பிலும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு செய்தி அறிக்கையும் தரப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. எனவே ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டதாக வந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்