ரூ. 72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதிய ரசிகை.. பதிலுக்கு அவர் என்ன செஞ்சார் தெரியுமா?

Jul 28, 2025,03:38 PM IST

மும்பை: இந்தி நடிகர் சஞ்சய் தத் மீதான பாசத்தால் தனக்குச் சொந்தமான ரூ. 72 கோடி மதிப்புள்ள சொத்தை அவருக்கு எழுதி வைத்துள்ளார் ஒரு ரசிகை. ஆனால் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சஞ்சய் தத், அந்த சொத்துக்களை அந்த ரசிகையின் குடும்பத்துக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்.


கேட்கவே ஆச்சரியமாக இருக்கில்லையா.. ஆனால் இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட தீவிர ரசிகர்களும் இருப்பது வியப்புதான். 


'கர்லி டேல்ஸ்' நேர்காணலில் இந்த சம்பவம் குறித்துக் குறிப்பிட்டார் சஞ்சய் தத். அதுகுறித்து அவர் கூறுகையில்,  2018-ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. நிஷா பாட்டீல் என்பவர் எனது தீவிர ரசிகையாக இருந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பெரும் கோடீஸ்வரியான அவர், தனது ஒட்டுமொத்த சொத்தையும் எனக்கு எழுதி வைத்து விட்டார். கிட்டத்தட்ட ரூ. 72 கோடி சொத்துக்கள் அவை. 




எனக்கு இது அதிர்ச்சி அளித்தது. நெகிழ்ச்சி அடைந்த நான் அதை அவரது குடும்பத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன். 62 வயதான அந்த ரசிகை, தான் இறந்த பிறகு தனது சொத்துக்களை எனக்கு மாற்றும்படி தனது வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார் என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.


சஞ்சய் தத் 1981-ஆம் ஆண்டு ராக்கி மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.  சாஜன், கல் நாயக், முன்னா பாய் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அவர் நடித்துள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அவரது தொடர்பு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றுத்தந்தது. அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.


தமிழிலும்  அவர் தனது அடியை எடுத்து வைத்தார். விஜய்யின் லியோ படத்தில் அவரது கேரக்டர் பேசப்பட்டது. பூத்னி மற்றும் ஹவுஸ்ஃபுல் 5 ஆகிய படங்களில் கடைசியாக அவர் நடித்துள்ளார். தெலுங்கில்  பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள அகண்டா 2' படத்திலும் தற்போது அவர் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்